December 6, 2025, 2:32 AM
26 C
Chennai

பயங்கரவாத முகாம்கள் மீதான நடவடிக்கை தொடரும்: முப்படை அதிகாரிகள் அறிவிப்பு!

marshal press meet - 2025

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவ தாக்குதல்
தொடரும் என்று முப்படை அதிகாரிகள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர்.

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் வரை, அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவ தாக்குதல் தொடரும் என்று முப்படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் விமானங்களை முறியடித்தது குறித்தும், அதையடுத்து  எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் டெல்லியில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறினர்.

கடந்த பிப். 27-ஆம் தேதி அன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்கள், இந்திய ராணுவ நிலைகளை குறி வைத்தன என்று இந்திய விமானப்படை அதிகாரி ஆர். ஜி.கே. கபூர் குறிப்பிட்டார்.

அந்த விமானங்களை இந்திய விமானப்படை திறம்பட திருப்பி விரட்டி அடித்ததாக கூறிய அவர், இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் எப் 16 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது என்றார்.

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் தாக்கியதற்கு போதிய
ஆதாரங்கள் உள்ளன என்று கூறிய அவர், எப்-16 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்ட
ஏவுகணைகளின் மிச்சங்கள் இதற்கு ஆதாரம் என்றார்.

பின்னர் பேசிய ராணுவ அதிகாரி சுரேந்திர சிங், காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் 27-ஆம் தேதி அன்று குறி வைத்து தாக்கியது! விமானப் படைக்கு ராணுவமும் ஒத்துழைத்து பதிலடி தாக்குதல் நடத்தியது என்றார்

எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. பயங்கரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவிக்கும் வரை, பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய தாக்குதல் தொடரும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.

பின்னர் பேசிய கடற்படை அதிகாரி டி.எஸ் குஜ்ரால், இந்திய கடற்படை பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளது! கடலுக்கு அடியில், கடல் பரப்பில், கடலுக்கு மேலான வான்பரப்பில் என முப்பரிமாணத்திலும் தாக்குதல் நடத்த முழு வல்லமையுடன் இந்திய கடற்படை உள்ளது என்றார்.

இந்தியாவின் முப்படைகளும் முழுமையாக தயார் நிலையில் உள்ளன என்று மூவரும் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories