பயங்கரவாத முகாம்கள் மீதான நடவடிக்கை தொடரும்: முப்படை அதிகாரிகள் அறிவிப்பு!

marshal press meet - 2026

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவ தாக்குதல்
தொடரும் என்று முப்படை அதிகாரிகள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர்.

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் வரை, அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவ தாக்குதல் தொடரும் என்று முப்படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் விமானங்களை முறியடித்தது குறித்தும், அதையடுத்து  எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் டெல்லியில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறினர்.

கடந்த பிப். 27-ஆம் தேதி அன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்கள், இந்திய ராணுவ நிலைகளை குறி வைத்தன என்று இந்திய விமானப்படை அதிகாரி ஆர். ஜி.கே. கபூர் குறிப்பிட்டார்.

அந்த விமானங்களை இந்திய விமானப்படை திறம்பட திருப்பி விரட்டி அடித்ததாக கூறிய அவர், இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் எப் 16 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது என்றார்.

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் தாக்கியதற்கு போதிய
ஆதாரங்கள் உள்ளன என்று கூறிய அவர், எப்-16 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்ட
ஏவுகணைகளின் மிச்சங்கள் இதற்கு ஆதாரம் என்றார்.

பின்னர் பேசிய ராணுவ அதிகாரி சுரேந்திர சிங், காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் 27-ஆம் தேதி அன்று குறி வைத்து தாக்கியது! விமானப் படைக்கு ராணுவமும் ஒத்துழைத்து பதிலடி தாக்குதல் நடத்தியது என்றார்

எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. பயங்கரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவிக்கும் வரை, பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய தாக்குதல் தொடரும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.

பின்னர் பேசிய கடற்படை அதிகாரி டி.எஸ் குஜ்ரால், இந்திய கடற்படை பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளது! கடலுக்கு அடியில், கடல் பரப்பில், கடலுக்கு மேலான வான்பரப்பில் என முப்பரிமாணத்திலும் தாக்குதல் நடத்த முழு வல்லமையுடன் இந்திய கடற்படை உள்ளது என்றார்.

இந்தியாவின் முப்படைகளும் முழுமையாக தயார் நிலையில் உள்ளன என்று மூவரும் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories