அபிநந்தன் எனும் பேருக்கான பொருளே மாறிவிட்டது! மோடி புகழாரம்!

modi in up kjissan - 2026

புது தில்லி: வாழ்த்துவதற்கும் வரவேற்பதற்கும் சொல்லப் படும் அபிநந்தனம் என்ற வார்த்தையின் பொருளே மாறிவிட்டது, அவ்வாறு மாற்றக்கூடிய ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

தில்லியில் நடந்த ‘கட்டுமான தொழில்நுட்ப இந்தியா 2019’ என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை புகழ்ந்தார்.

இந்த விழாவில் பேசிய போது, இந்தியா என்ன செய்கிறது என்பதை உலகமே உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது. அகராதியில் உள்ள சொற்களின் பொருளை மாற்றும் ஆற்றலை இந்தியா பெற்றுள்ளது. வரவேற்பதற்காகவும் வாழ்த்துவதற்காகவும் பயன்பட்ட வார்த்தை, அபிநந்தனம் என்பது. தற்போது அபிநந்தன் என்ற பெயருக்கான அர்த்தமே மாறி உள்ளது.. என்று மோடி புகழ்ந்தார்.

மேலும், அத்தகைய ஆற்றல் வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்றும், தீரமிக்க நாடாக தன்னம்பிக்கையோடு நாம் முன்னேறிச் செல்வோம் என்றும் பலத்த கைதட்டல்களுக்கு இடையே பிரதமர் மோடி குறிப்பிட்டார். நாட்டின் இளைஞர்களுக்கு தேசப் பற்றின் உள்ளர்த்தத்தைச் சொல்லிக் கொடுத்த நாயகனாக உயர்ந்துள்ள, இந்திய விமானப் படையின் போர் விமானி அபிநந்தனை குறிக்கும் வகையில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியது பலரையும் ரசிகக் வைத்தது.

முன்னதாக நேற்று அபிநந்தன் நாடு திரும்பிய போது தனது டிவிட்டர் பதிவில் கருத்து பதிவிட்ட மோடி, அபிநந்தனின் அபரிமிதமான துணிச்சலால் நாடே பெருமை அடைவதாகவும், நமது ராணுவம் 130 கோடி இந்தியர்களுக்கு, முன்னுதாரணமாக திகழ்வதாகவும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories