December 6, 2025, 3:08 AM
24.9 C
Chennai

பாஜக., பெண் வேட்பாளரின் உள்ளாடை குறித்த விமர்சனம்: சமாஜ்வாதி ஆசம்கான் மீது வழக்கு!

azam khan jayaprada - 2025

பாஜக., சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் நடிகை ஜெயப்பிரதாவின் உள்ளாடையின் வண்ணம் குறித்துப் பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, உ.பி., முன்னாள் அமைச்சர் ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

உ.பி., மாநிலம் ராம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டி யிடுகிறார். இவர் முன்னர் சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜக.,வில் சேர்ந்தார்.

இதே தொகுதியில் அவரை எதிர்த்து, சமாஜ்வாதி கட்சி சார்பில் ஆசம்கான் போட்டி இடுகிறார். இவர் உபி., மாநில முன்னாள் அமைச்சர்.

ஏற்கெனவே, நடிகை ஜெயப்ரதாவை ஆசம்கான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவரது தரங்கெட்ட விமர்சனத்துக்காக, சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரசாரத்தின் போது மேடையிலேயே ஜெயப்ரதா அழுதார். இந்தச் சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஏப்.14 ஞாயிற்றுக் கிழமை நேற்று ராம்பூரில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ஆசம்கான், கடந்த 10 ஆண்டாக ஒருவர் ராம்பூர் மக்களின் ரத்தத்தை குடித்தார். அந்த நபரை ராம்பூருக்கு அறிமுகப்படுத்தியது நான் தான். அவரது விரலைப் பிடித்து நான்தான் அழைத்து வந்தேன். ராம்பூர் முழுவதும் அவரை நான் பிரபலமாக்கினேன். அவரை யாரும் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டேன். அவரை 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தீர்கள். அவரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ள உங்களுக்கு 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி நிற உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாளிலேயே நான் தெரிந்து கொண்டேன் என்று பேசினார்.

இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், ஜெயப்பிரதா மீண்டும் கண்கலங்கிய குரலில் ஆசம்கான் குறித்து புகார் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் ஆசம்கானை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. அவர் வெற்றி பெற்றால் ஜனநாயகத்தில் என்ன நடக்கும்? பெண்களுக்கு சமூகத்தில் இடமிருக்காது. நான் இந்தப் பேச்சுகளுக்காக பயந்துபோய் ராம்பூரை விட்டு சென்று விடுவேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் இங்கிருந்து அப்படியெல்லாம் போய்விட மாட்டேன். நான் செத்துப் போனால் நீங்கள் திருப்தி அடைவீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை அடுத்து, ஆசம்கானின் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. மேலும், அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஆசம்கான் மீது காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான இந்தப் பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும் படி, தேசிய மகளிர் ஆணையம் ஆசம்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories