இந்தியாவில் முதல்முறையாக… தங்கள் பகுதி ‘விலாயத் ஆஃப் ஹிந்த்’ என உரிமை கோரும் ஐ.எஸ்., அமைப்பு!

Published:

Islamic State claims province in india - 2026

இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட், ஐஎஸ் அமைப்பு, முதல் முறையாக இந்தியாவில் ஒரு பகுதியை தங்கள் பகுதி என விலாயத் ஆஃப் ஹிந்த் என குறிப்பிட்டு தகவல் வெளியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நேற்று, ஐஎஸ் அமைப்பின் செய்தி இணையதளமான அமாக் நியூஸ் ஏஜென்ஸியில், (Amaq News Agency) ஐஎஸ் அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், விலயாஹ் ஆஃப் ஹிந்த் (Wilayah of Hind) என்ற பகுதியை தங்களுடைய மாகாணமாக ஐஎஸ் அறிவித்திருந்தது.

சோபியானில் நடைபெற்ற என்கவுண்டரில் இஷ்ஃபக் அகமது சோபி என்பவர் கொல்லப்பட்டதாக போலீஸாரின் அறிக்கையை சுட்டிக் காட்டி, ஐஎஸ் வெள்ளிக்கிழமை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் இது போன்றுதான் தங்கள் பகுதி என்று குறிப்பிட்டு, உரிமை கோரி, அதனைத் தங்கள் தளமாகக் கொண்டு மேலும் மேலும் பயங்கரவாதச் செயல்களால் இஸ்லாமியரிலேயே இன்னொரு பிரிவினரையும் மற்ற மதத்தவர்கள் பலரையும் கொன்று குவித்தார்கள் ஐஎஸ் பயங்கரவாதிகள்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img