தனது மாநிலங்களவை எம்பி., பதவியை ராஜினாமா செய்துள்ளார் திமுக.,வின் கனிமொழி.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி ஏற்கெனவே மாநிலங்களவையில் உறுப்பினராகவும் இருக்கிறார். தேர்தல் வெற்றியை தொடர்ந்து அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதுபோல், மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரும் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்.