ஜெகனுக்காக தொண்டர் போட்ட விசித்திர சபதம்! 10 ஆண்டுகள் கழித்து நிறைவேறியுள்ளது!

Published:

ysr cong reddy - 2026

நம் ஊரில் தலைவர்களுக்காக தீக்குளிக்கும் நாடகம் நடப்பதை பார்த்து இருக்கிறோம்; ஆனால் ஆந்திரப் பிரதேசத்தில் விசித்திரமாக ஜெகன் பதவிப் பிரமாணம் செய்த பின்தான் செருப்பு அணிந்து கொள்வேன் என்று சூளுரைத்து நடத்திக்காட்டியுள்ளார் அணில் குமார் என்ற தீவிர விசுவாசி.

தனக்குப் பிடித்த தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக அரியணை ஏறும் வரை காலுக்கு செருப்பு அணிய மாட்டேன் என்று சபதம் செய்த ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர் தன் கனவு நிறைவேறியவுடன் மகிழ்ச்சியோடு செருப்பு அணிந்து காணப்படுகிறார்.

ஜெகன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மறுகணம் காலுக்கு செருப்பு அணிந்து கொள்ள வேண்டும் என்று அனில்குமார் நிச்சயித்துக் கொண்டார். 10 ஆண்டுகளாக ஜனநேதா ஜகன் முதலமைச்சராக வேண்டும் என்று இரவு பகல் பாராது உழைத்தார் அணில்குமார்.

இந்த 10 ஆண்டுகளும் காலுக்கு செருப்பு அணியாமலேயே இருந்து வந்தார் வெயில் மழை பாராமல் வெறும் காலோடு உழைத்த அனில்குமார் தெலங்கானா ஆந்திரா பிரிவினையில் முக்கிய பங்கு வகித்தார் .

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

ராஜசேகர் ரெட்டியின் ஆதரவாளர்கள் முக்கியமானவராக இருந்தார் அவர் மீது கடுமையான விசுவாசம் கொண்டவர். 2009இல் ராஜசேகர ரெட்டியின் அகால மரணத்தின் பின் ஜெகனை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று அயராது பாடுபட்டார்.

காங்கிரஸ் ஜகனை சிறையில் தள்ளியது. அச்சமயத்தில் அனில்குமார் பஸாரா சரஸ்வதிதேவி கோவிலுக்குச் சென்று ஜெகனை முதல்வராக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்! அதோடுகூட ஜெகன் முதல்வர் பதவியில் அமரும் வரை காலுக்கு செருப்பு அணிய மாட்டேன் என்று சபதமிட்டார்

உறவும் நட்பும் அவரை பார்த்து உனக்கு என்ன பைத்தியமா என்று ஏளனம் செய்தார்கள்! யாரையும் லட்சியம் செய்யாமல் அனில் குமார் தன் சபதத்தை நிறைவேற்றினார்!

ஜெகன் தேர்தலில் வென்றதும் மீண்டும் பாசரா சென்று வேண்டுதலை நிறைவேற்றினார்.  ஜெகன் பதவி பிரமாணம் செய்து கொண்ட பண்டிகையை கண்ணாரக் கண்ட பின் தான் செருப்பணிந்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img