February 22, 2026, 5:03 PM
29 C
Chennai

ஜெகனுக்காக தொண்டர் போட்ட விசித்திர சபதம்! 10 ஆண்டுகள் கழித்து நிறைவேறியுள்ளது!

ysr cong reddy - 2026

நம் ஊரில் தலைவர்களுக்காக தீக்குளிக்கும் நாடகம் நடப்பதை பார்த்து இருக்கிறோம்; ஆனால் ஆந்திரப் பிரதேசத்தில் விசித்திரமாக ஜெகன் பதவிப் பிரமாணம் செய்த பின்தான் செருப்பு அணிந்து கொள்வேன் என்று சூளுரைத்து நடத்திக்காட்டியுள்ளார் அணில் குமார் என்ற தீவிர விசுவாசி.

தனக்குப் பிடித்த தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக அரியணை ஏறும் வரை காலுக்கு செருப்பு அணிய மாட்டேன் என்று சபதம் செய்த ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர் தன் கனவு நிறைவேறியவுடன் மகிழ்ச்சியோடு செருப்பு அணிந்து காணப்படுகிறார்.

ஜெகன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மறுகணம் காலுக்கு செருப்பு அணிந்து கொள்ள வேண்டும் என்று அனில்குமார் நிச்சயித்துக் கொண்டார். 10 ஆண்டுகளாக ஜனநேதா ஜகன் முதலமைச்சராக வேண்டும் என்று இரவு பகல் பாராது உழைத்தார் அணில்குமார்.

இந்த 10 ஆண்டுகளும் காலுக்கு செருப்பு அணியாமலேயே இருந்து வந்தார் வெயில் மழை பாராமல் வெறும் காலோடு உழைத்த அனில்குமார் தெலங்கானா ஆந்திரா பிரிவினையில் முக்கிய பங்கு வகித்தார் .

ராஜசேகர் ரெட்டியின் ஆதரவாளர்கள் முக்கியமானவராக இருந்தார் அவர் மீது கடுமையான விசுவாசம் கொண்டவர். 2009இல் ராஜசேகர ரெட்டியின் அகால மரணத்தின் பின் ஜெகனை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று அயராது பாடுபட்டார்.

காங்கிரஸ் ஜகனை சிறையில் தள்ளியது. அச்சமயத்தில் அனில்குமார் பஸாரா சரஸ்வதிதேவி கோவிலுக்குச் சென்று ஜெகனை முதல்வராக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்! அதோடுகூட ஜெகன் முதல்வர் பதவியில் அமரும் வரை காலுக்கு செருப்பு அணிய மாட்டேன் என்று சபதமிட்டார்

உறவும் நட்பும் அவரை பார்த்து உனக்கு என்ன பைத்தியமா என்று ஏளனம் செய்தார்கள்! யாரையும் லட்சியம் செய்யாமல் அனில் குமார் தன் சபதத்தை நிறைவேற்றினார்!

ஜெகன் தேர்தலில் வென்றதும் மீண்டும் பாசரா சென்று வேண்டுதலை நிறைவேற்றினார்.  ஜெகன் பதவி பிரமாணம் செய்து கொண்ட பண்டிகையை கண்ணாரக் கண்ட பின் தான் செருப்பணிந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories