December 6, 2025, 9:10 AM
26.8 C
Chennai

மம்தாவை நோக்கி ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டு உசுப்பேற்றியதாக 7 பேர் கைது!

mamta banarjee - 2025

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நோக்கி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்ட எழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, நேற்று வடக்கு 24 பர்கானா மாவட்டம் வழியாக தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த சிலர், மம்தாவின் காரை நோக்கி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டனர். இதனால் மீண்டும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் மம்தா பானர்ஜி.

இதை அடுத்து, திடீரென தனது காரை நிறுத்தி, விடுவிடுவென்று காரில் இருந்து இறங்கினார்.. கோஷமிட்டவர்களின் பெயர்களை குறித்துக் கொள்ளுமாறு பாதுகாவலர்களிடம் கட்டளை இட்டார். பின்னர் காரில் ஏறிய மம்தாவை நோக்கி, அவர்கள் மீண்டும் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர்.

இதை அடுத்து மேலும் கோபம் அடைந்தார். மம்தா. தன்னிலை மறந்த நிலையில் காருக்குள் இருந்து இறங்கினார். அருகில் இருந்தவர்களை கைநீட்டி எச்சரிக்கை செய்தார்.

பிஜேபியினரும் வெளி நபர்களும் தான் இப்படி முழக்கம் போடுகின்றனர், என்னை அவமதிக்கவே இவ்வாறு கோஷம் போடுகின்றனர் என்றெல்லாம் கத்தித் தீர்த்துவிட்டு, கார் ஏறிச்சென்றார்.

இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது .முன்னரும் இதே போல்தான் ஒரு வீடியோ வைரலானது.

இந்நிலையில், மம்தா பானர்ஜியின் புகாரை அடுத்து, பாதுகாவலர்கள் ஏழு பேரை அடையாளம் கண்டு, கைது செய்துள்ளனர்.

இதனிடையே, மற்ற மாநிலங்களில் தவறு செய்தால் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம், மேற்கு வங்கத்தில் மட்டும் ஜெய்ஸ்ரீராம் சொன்னால் போதும்,. சிறைக்குப் போகலாம், போலீஸ் உங்களைத் தேடி வீட்டுக்கு வரும் என்று சமூக வலைத்தளங்களில் கலாய்க்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories