கோவையில் முறைகேடு நடந்த கோப்புகள் தீயிட்டு எரிப்பு! நகர ஊரமைப்பு துறையில் துணிகரம்; துணை இயக்குனர் விசாரணை பரபரப்பு…..!

kovi 2 1 - 2026
கோவையில் உள்ள நகர ஊரமைப்புத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் கோப்புகள் எரிக்கப்பட்டது தொடர்பாக, சென்னை அலுவலக துணை இயக்குனர் சேகரன், நேற்று ஆய்வு செய்து, விசாரணை நடத்தினார்.

கோவை,ஊழல் கோப்புகள்,தீயிட்டு எரிப்பு, நகர ஊரமைப்பு துறை, துணிகரம், துணை இயக்குனர், விசாரணை

கோவை,நஞ்சப்பா ரோட்டில் உள்ள, மாநகராட்சி வணிக வளாகத்தில், நகர ஊரமைப்புத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகம் செயல் படுகிறது.

இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில், மனை வரன்முறைப் படுத்துதல், கட்டடம் மற்றும் ‘லே-அவுட்’ அனுமதி பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்தாண்டு,திருப்பூர்,

ஈரோட்டை ஒருங்கிணைத்து, திருப்பூரில் நகர ஊரமைப்புத் துறை அலுவலகம் துவக்கப்பட்டது.

இந்த அலுவலகத்திற்கு கோவை மண்டல அலுவலகத்தில் உள்ள பழைய கோப்புகளை அனுப்ப வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல், கோவையில் உள்ள அதிகாரிகளே விசாரணை நடத்தி, பழைய தேதியிட்டு, ஒப்புதல் வழங்குவதாக புகார் எழுந்தது.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

.இதேபோல், அங்கீகாரமற்ற மனைகளை வரன் முறைப்படுத்த, சதுரடிக்கு, ஏழு ரூபாய் லஞ்சமாக கேட்பதாகவும் புகார் கூறப்பட்டது.

அதாவது, ஒரு சைட்டுக்கு, அங்கீகார கட்டணம் 7,000 ரூபாய் போக, லஞ்சமாக மட்டும், ரூ.10 ஆயிரத்து, 500 கொடுக்க வேண்டியிருப்பதாக, நில உரிமையாளர் கள் சிலர் புகார் கூறினர்.

இந்நிலையில் கோவை மண்டல நகர ஊரமைப்புத்துறை அலுவலகத்தின் பின்புறம், திருப்பூர்மாவட்டத்தை சேர்ந்த பழைய கோப்புகள், தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளன. மனை வரன்முறைப்படுத்த விண்ணப் பித்தவர்கள் தவித்து நிற்கின்றனர்.

இது குறித்து அலுவலக துணை இயக்குனர் சேகரன் தலைமையிலான அதிகாரிகள் கோவையில் விசாரணை நடத்தினர்.

அப்போது, கோப்புகள் எரிக்கப்பட்டது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள், எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தனர். கோப்புகள் எரிக்கப்பட்ட பகுதியில், அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அப்போது அங்கு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சில கோப்புகள், பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனா்.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  கோவையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக, நகர ஊரமைப்புத்துறை ஆணையருக்கும், புகார் அனுப்பப்பட்டுள்ளது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories