December 6, 2025, 9:55 AM
26.8 C
Chennai

கோவையில் முறைகேடு நடந்த கோப்புகள் தீயிட்டு எரிப்பு! நகர ஊரமைப்பு துறையில் துணிகரம்; துணை இயக்குனர் விசாரணை பரபரப்பு…..!

kovi 2 1 - 2025
கோவையில் உள்ள நகர ஊரமைப்புத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் கோப்புகள் எரிக்கப்பட்டது தொடர்பாக, சென்னை அலுவலக துணை இயக்குனர் சேகரன், நேற்று ஆய்வு செய்து, விசாரணை நடத்தினார்.

கோவை,ஊழல் கோப்புகள்,தீயிட்டு எரிப்பு, நகர ஊரமைப்பு துறை, துணிகரம், துணை இயக்குனர், விசாரணை

கோவை,நஞ்சப்பா ரோட்டில் உள்ள, மாநகராட்சி வணிக வளாகத்தில், நகர ஊரமைப்புத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகம் செயல் படுகிறது.

இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில், மனை வரன்முறைப் படுத்துதல், கட்டடம் மற்றும் ‘லே-அவுட்’ அனுமதி பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்தாண்டு,திருப்பூர்,

ஈரோட்டை ஒருங்கிணைத்து, திருப்பூரில் நகர ஊரமைப்புத் துறை அலுவலகம் துவக்கப்பட்டது.

இந்த அலுவலகத்திற்கு கோவை மண்டல அலுவலகத்தில் உள்ள பழைய கோப்புகளை அனுப்ப வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல், கோவையில் உள்ள அதிகாரிகளே விசாரணை நடத்தி, பழைய தேதியிட்டு, ஒப்புதல் வழங்குவதாக புகார் எழுந்தது.

.இதேபோல், அங்கீகாரமற்ற மனைகளை வரன் முறைப்படுத்த, சதுரடிக்கு, ஏழு ரூபாய் லஞ்சமாக கேட்பதாகவும் புகார் கூறப்பட்டது.

அதாவது, ஒரு சைட்டுக்கு, அங்கீகார கட்டணம் 7,000 ரூபாய் போக, லஞ்சமாக மட்டும், ரூ.10 ஆயிரத்து, 500 கொடுக்க வேண்டியிருப்பதாக, நில உரிமையாளர் கள் சிலர் புகார் கூறினர்.

இந்நிலையில் கோவை மண்டல நகர ஊரமைப்புத்துறை அலுவலகத்தின் பின்புறம், திருப்பூர்மாவட்டத்தை சேர்ந்த பழைய கோப்புகள், தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளன. மனை வரன்முறைப்படுத்த விண்ணப் பித்தவர்கள் தவித்து நிற்கின்றனர்.

இது குறித்து அலுவலக துணை இயக்குனர் சேகரன் தலைமையிலான அதிகாரிகள் கோவையில் விசாரணை நடத்தினர்.

அப்போது, கோப்புகள் எரிக்கப்பட்டது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள், எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தனர். கோப்புகள் எரிக்கப்பட்ட பகுதியில், அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அப்போது அங்கு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சில கோப்புகள், பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனா்.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  கோவையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக, நகர ஊரமைப்புத்துறை ஆணையருக்கும், புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories