கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? சந்தேகத்தின் பேரில் கல்லுாரி மாணவருக்கு சிகிச்சை…!

neeba virs 2 - 2026

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கியிருக்ககூடும் என்ற சந்தேகத்தின் பேரில் கல்லுாரி மாணவர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரளாவில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவி கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களில் பலர் பரிதாபமாக உயிரழந்தனா். டெரோபஸ் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தின்னி வவ்வால்களில் மூலம் பரவும் இந்த வைரஸ் கடந்த ஆண்டு கேரளாவை உலுக்கி வந்தது.

மலேசிய நாட்டில் முதன்முதலில் கண்டறிப்பட்ட இந்த வைரஸ் அங்கிருந்து கேரளா வந்திருக்கலாம் என கருத்தப்பட்டது.

கோழிக்கோடு மாவட்டம் பெரும்பாரா பகுதியில் உள்ள சூபிக்கடா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்குதான் முதலில் இந்த வைரஸ் தாக்கியது, கடும் காய்ச்சல் ஏற்பட்டு இவர்கள் மூன்றுபேரும் உயிரிழந்துள்ளனா்.

அவர்களில் ஒருவருக்கு சிகிச்சை அளித்த செவிலியரும் லினியும் பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதித்து மேலும் பலா் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

புனேயில் உள்ள தேசிய வைராலஜி சோதனைக் கூடத்தில் சோதனை செய்யப்பட்டு கேராளவில் நிபா வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு்ள்ள சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது ரத்த மாதிரி புனேயில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வந்து சேர வில்லை.

இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறுகையில் ‘இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் ஒருவருக்கு நிபா வைரஸ் காயச்சல் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரத ரத்த மாதிரி புனே தேசிய வைராலஜி ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன் முடிவு வந்த பிறகே உறுதி செய்ய முடியும்.

நான்கு நாட்களாக காய்ச்சல் வந்த நிலையில் திருச்சூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகே கல்லுாரி மாணவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருக்ககூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

அந்த மாணவருடன் சேர்ந்து தங்கிய சிலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் அவர்களையும் மருத்துமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Entertainment News

Popular Categories