December 6, 2025, 9:42 AM
26.8 C
Chennai

கன்னட இலக்கியவாதியும் நடிகருமான கிரிஷ் கர்னாட் காலமானார்!

girish karnad - 2025

கன்னட மொழி எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர், சிறந்த நடிகர் என பன்முகத் தன்மை கொண்டிருந்த இலக்கியவாதி கிரிஷ் கர்னாட் காலமானார். அவருக்கு வயது 81.


* பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார். அவருக்கு வயது 81

* பெங்களூருவில் வசித்து வந்த கிரிஷ் கர்னாட், வீட்டில் உயிர் பிரிந்தது

* காதலன், ஹேராம், செல்லமே, ரட்சகன், மின்சாரக் கனவு உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர் கிரிஷ் கர்னாட்.


கடந்த நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை எழுதி இயக்கி வந்தவர். இப்ராகிம் அல்காசி, பீ. வீ. கரந்த், அலிகியூ படம்சே, பிரசன்னா, அரவிந்த் கவூர், சத்யதேவ் துபே, விஜயா மேத்தா, ஷியாமானந்த் ஜலன் மற்றும் அமல் அலானா போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களால் அவரது நாடகங்கள் இயக்கப்பட்டன.

ஒரு நடிகராக, இயக்குனராக, திரைக்கதை எழுத்தாளராக இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்றவர். இதன் மூலம் விருதுகள் பல பெற்றவர். பத்மஸ்ரீ, பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி, இந்திய அரசு அவரை கௌரவித்துள்ளது.

girish karnat - 2025நாடக மேடை, இலக்கியத்தில் கொடிகட்டிப் பறந்தாலும், திரைப்பட நடிகராகவே அவரை உலகம் வெகு எளிதில் அடையாளம் கண்டுகொண்டது. தமிழிலும் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்தர, வில்லன் வேடங்களில் சிறப்பாக நடித்தவர்.

81 வயதான கிரிஷ் கர்னாட், இலக்கியத்தின் மிக உயர்வான கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு பேரில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

அவர், இன்று காலை வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு இலக்கிய உலகைச் சேர்ந்தவர்கள், நடிகர்கள் திரையுலக முக்கியப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”5″ tax_term=”39″ order=”desc”]

1 COMMENT

  1. கன்னட கலை இலக்கிய துறையில் தடம் பதித்தவர் மறைந்த திரு கிரிஷ் கர்னாட் அவர்கள். எழுத்தாலும் நடிப்பாலும் பலரின் இதயத்தில் இடம் பெற்றவர் அவர். அவரது மறைவு கன்னட உலகுக்கு மட்டுமல்ல. மொத்த நாட்டுக்கும் பேரிழப்பு தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories