குடியரசுத் தலைவர் உரையின் போது… மொபைல் போனில் மூழ்கிய ராகுல்! காரணம் என்ன தெரியுமா?!

rahul on mobile - 2026

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது, தனது மொபைல் போனிலேயே மூழ்கியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. அது ஏன் என்பதற்கு காங்கிரஸார் இப்போது விளக்கம் அளித்து வருகின்றனர்.

17வது மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ராகுலால் ஜீரணிக்க முடியவில்லை. குறிப்பாக அமேதி தொகுதியில் தனக்கு ஏற்பட்ட தோல்வியால் ராகுல் அமைதி இழந்து தவிப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு பொறுப்பேற்று தாம் தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். ஆனால் அதை காங்கிரஸ் காரிய கமிட்டி நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, அவரது உரையில் கவனம் செலுத்தாமல் ராகுல் மொபைல் போனில் மூழ்கியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Rahul Gandhi busy browsing phone as President Kovind - 2026நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார். இதில் பங்கேற்ற ராகுல், சுமார் 24 நிமிடங்கள் மொபைல் போனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

தொடர்ந்து அதில் ஏதோ டைப் செய்தார். தொடர்ந்து மொபைல்போனில் படம் பிடித்த ராகுல், 20 நிமிடங்கள் தனது தாயார் சோனியாவுடன் பேசிக் கொண்டிருந்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு சோனியா உள்ளிட்ட எம்.பி.,க்கள் வரவேற்பு தெரிவித்து மேஜையை தட்டினர். ஆனால் ராகுல் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.

குடியரசுத் தலைவர் தனது உரையில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், பாலக்கோட் தாக்குதல் இவை பற்றி எல்லாம் குறிப்பிட்டார். அப்போது சோனியா உள்ளிட்டோர் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால் ராகுலோ எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தார். அவ்வப்போது சோனியா ராகுலை கவனித்தாலும், ராகுலோ அமைதியாக இருந்தார்.

நேரலையில் இவற்றைக் கண்ட பெரும்பாலானோரும் அதிர்ச்சி அடைந்தனர். ஊடகங்களில் இன்று ராகுலின் இந்தச் செய்கைகள் பெரிதும் விவாதிக்கப் பட்டன. இந்நிலையில், ராகுல் ஏன் அவ்வாறு இருந்தார், ஏன் மொபைல் போனை பார்த்துக் கொன்டிருந்தார் என்பதற்கான விளக்கங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் மிகக் கடினமான ஹிந்திச் சொற்களைப் பயன்படுத்தியிருந்தார் என்றும், அவற்றுக்கான பொருள் தெரியாததால், அந்த வார்த்தைகளை மொபைல் போனில் போட்டு, அவற்றை தேடிக் கொண்டிருந்தார் என்றும் காங்கிரஸார் கூறுகின்றனர்.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories