ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு
ஹைதராபாத்: திருப்பதியை அடுத்த சேஷாசலம் சீனிவாசமங்காபுரம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸாருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, ஆந்திர மாநில அரசு இதனைத் தெரிவித்தது. தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது ஆந்திர அரசின் சார்பில் கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞர் (ஏ.ஏ.ஜி.) டி. ஸ்ரீநிவாஸ் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், இந்தச் சம்பவம் தொடர்பாக இ. த. ச. பிரிவு 302 (கொலை), 364 (கடத்தல் அல்லது கொலை செய்வதற்காக கடத்தல்), 34 (பொதுவான உள்நோக்கத்துடன் பல்வேறு நபர்கள் கூட்டாகச் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் பெயர்கள் குறிப்பிடப்படாத, ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் மீது, ஆந்திர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சசிகுமாரின் மனைவி முனியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையை ஆந்திர போலீஸார் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பதற்கான நடவடிக்கையிலும் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது என்றார்.
மேலும் செய்திகள்
ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது
ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது சென்னை: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை ஆயிரம்…
ஆந்திர அரசை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
கார் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 குழந்தைகள் உயிரிழப்பு!
ஏப்.24ல் சென்னையில் குண்டு வெடிக்கும்; ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 10 பேரையாவது கொல்வோம்: ஐ.எஸ். பயங்கரவாதிகள்
சி.பி.எஸ்.இ. நெட் தகுதித் தேர்வு அறிவிப்பு
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான வி்ண்ணப்பம் விநியோகம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான வி்ண்ணப்பம் விநியோகம்
வீட்டில் தனியாக இருந்த 4 ஆம் வகுப்பு சிறுமி பலாத்காரம்: மாணவர்கள் இருவருக்கு வலைவீச்சு
பள்ளி மாணவியை கற்பழித்து ஆபாச வீடியோ: மிரட்டி மீண்டும் கற்பழித்த 5 பேர் கைது