January 25, 2025, 4:08 PM
29 C
Chennai

ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு

ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு

red-sanders-killed-andhra ஹைதராபாத்: திருப்பதியை அடுத்த சேஷாசலம் சீனிவாசமங்காபுரம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸாருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, ஆந்திர மாநில அரசு இதனைத் தெரிவித்தது. தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது ஆந்திர அரசின் சார்பில் கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞர் (ஏ.ஏ.ஜி.) டி. ஸ்ரீநிவாஸ் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், இந்தச் சம்பவம் தொடர்பாக இ. த. ச. பிரிவு 302 (கொலை), 364 (கடத்தல் அல்லது கொலை செய்வதற்காக கடத்தல்), 34 (பொதுவான உள்நோக்கத்துடன் பல்வேறு நபர்கள் கூட்டாகச் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் பெயர்கள் குறிப்பிடப்படாத, ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் மீது, ஆந்திர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சசிகுமாரின் மனைவி முனியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையை ஆந்திர போலீஸார் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பதற்கான நடவடிக்கையிலும் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது என்றார்.

ALSO READ:  IND Vs AUS Test: ஸ்கோரை தூக்கி நிறுத்திய இந்திய தொடக்க வீரர்கள்!

மேலும் செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது

உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது சென்னை: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை ஆயிரம்…

 

ALSO READ:  சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த விவகாரம்: போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

 

 

 

 

 

ALSO READ:  பக்தர்கள் நெரிசலில் சபரிமலை; விபத்துகளைத் தடுக்க போலீஸார் எச்சரிக்கை!

 

 

 

 

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.