ஜெகன் அள்ளித்தெளிக்கும் வாக்குறுதிகளை பார்த்தால் பயம் ஏற்படுகிறது என்று, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் விமர்சனம் செய்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அளித்துவரும் வாக்குறுதிகளும் எடுத்துவரும் திட்டங்களும் பயமுறுத்துகின்றன என்று முன்னாள் முதலமைச்சர் ‘நாதெள்ள பாஸ்கர் ராவு’ விமர்சித்தார்.
ஜெகனின் ஒரு மாத கால ஆட்சி எவ்வாறு உள்ளது என்று தன்னால் இப்போதே கூற இயலாது என்று கருத்து கூறிய அவர், ஆனால் ஜெகன் எடுத்து வரும் பல முடிவுகளோடு தனக்கு உடன்பாடு இல்லை என்று விமர்சனம் செய்தார்.
அம்மா மடி, விவசாயிகளுக்கு முதலீட்டுக்காக பணம் அளிப்பதாக ஜகன் அறிவித்தது போன்றவற்றுக்கு நிதி எங்கிருந்து வரும் என்று தனக்குப் புரியவில்லை என்றார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஏற்கெனவே இரண்டரை லட்சம் கோடிகள் கடனில் இருக்கிறது! இப்படிப்பட்ட நேரத்தில் இதுபோன்ற வாக்குறுதிகள் அளிப்பது சரியல்ல என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
கிராமங்களில் தன்னார்வலர்களை நியமிப்பது குறித்த ஆலோசனை கூட வெற்றி பெறும் என்று தான் நினைக்கவில்லை என்று பாஸ்கர் ராவ் தெரிவித்தார். கிராமத்தில் இந்த அமைப்பு மேலும் பல புதிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.
அமைச்சரவையில் அனுபவம் வாய்ந்த மனிதர்கள் இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் ஜெகனின் கேபினெட் அவ்வாறு இல்லை! ஆனால் மக்களுக்கு ஏதோ நன்மை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் ஜெகனிடம் தெரிகிறது! அவ்வளவுதான்..! என்று கூறினார் பாஸ்கர் ராவ்.