திறந்த மடல்
சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தினுடைய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் அங்கத்தினர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.! சுவாமி சரணம் .!!
கடந்த சில மாதங்களாக, சபரிமலையில் இளம் பெண்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்ப்ட்ட வழக்கும் அதனை ஒட்டிய சர்ச்சைகளும் பத்திரிகை மற்றும் டீ வீ க்களில் வந்துகொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். பெண்களுக்கு சபரிமலை செல்ல தடை என்ற வாதமே பொய்யானது. குறிப்பிட்ட வயதுடைய, இன்னும் சொல்லப்போனால் கருத்தரிக்கும் வயதுடைய இளம் பெண்களுக்கு தான் அங்கு பிரவேசிக்க கட்டுப்பாடு உள்ளது. 10 வயதிற்கு முன்னமும் 50 வயதிற்கு பின்னமும் உள்ள பெண்கள் தாராளமாக சபரிமலைக்கு வரலாம், வந்து கொண்டும் இருக்கிறார்கள். அளவுக்கதிகமான கூட்டம் வருவதால் தான் இக்குறிப்பிட்ட பெண்களுக்கு கட்டுப்பாடு என இல்லை. புவியியல் ரீதியாகவும், பல்வேறு பூஜை புனஸ்காரங்கள் மூலம் இறை அலை ரீதியாகவும் சபரிமலை மிகவும் சக்தியுடையது. அப்பேர்ப்பட்ட அவ்விடத்தில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் பிரவேசிக்கும்போது அவர்கள் உடலில் ஏறப்பெடும் மாற்றங்கள், அவர்களுக்கு நன்மையை விட தீமையை அதிகம் ஏற்படுத்தும். தந்திர ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் இதை நன்கறிந்த ஞானிகளான நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆச்சாரமாக அது மாறிவிட்டது. ஹிந்து கோவில்களின் தாத்பரியத்தையும், சிறப்பையும், அக்கோவில்களில் தரிசனம் செய்தால் மனித உடலில் ஏற்படுகின்ற அபாரமான மாற்றங்களையும் அறிவியல் ரீதியாகவோ, நம்பிக்கை ரீதியாகவோ தெரிந்து கொள்ளாத விஷமிகளான மனிதர்களின் விஷமத்தனத்தின் வெளிப்பாடு தான் இவ்வழக்கு என்பதை நாம் புரிந்து கொள்வோம்.
இக்கடிதம் மூலம் எனது முயற்சி இதை பற்றி விளக்கி கூறுவதல்ல. மாறாக, விழிப்புணர்வுள்ள அய்யப்ப பக்தர்களாகிய நமது செயல் திட்டம் உங்களிடம் தெரிவிப்பது தான்.
கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி கேரள மாநிலம் கோட்டயத்தில் வைத்து ஒரு கருத்தரங்கம் நடத்தினோம். சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ஏற்ப்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் ஆர். எஸ். எஸ், விஸ்வஹிந்து பரிஷத், ஹிந்து ஐக்கியவேதி, ஆலய பாதுகாப்பு சமிதி,மாத்ரு சமிதி, ப்ராமண சமூகம், ஆலங்காடு பேட்டா, ஹரிஜன சமூகம்., ஜோதிடர் அமைப்பு, பாரதீய மஸ்தூர் சஙகம் போன்ற 40 க்கும் மேற்பட்ட ஹிந்து கலாச்சார, ஆன்மீக, சமுதாய அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொறுப்பாளர்கள் பங்கு கொண்டார்கள். ” சபரிமலை ஆச்சார ரக்ஷா வேதி” ( சபரிமலை ஆச்சார பாதுகாப்பு அமைப்பு ) என இந்த ஒருங்கிணைந்த சக்திக்கு பெயர் வைத்தோம். அங்கு வந்த யோசனைகளின் அடிப்படையில், ஜூன் 23 -ம் தேதி ஆல்வாய் என்ற ஊரில் அமைந்துள்ள தந்திரவித்யா பீடத்தில் வைத்து, தாந்த்ரீக, வைதீக விஷயங்களில் அபரிமிதமான அறிவுள்ள ஆச்சார்யர்களின் ஒரு நாள் கூட்டம் நடத்தினோம்.
கேரள மாநில ஆர் எஸ் எஸ்ஸின் தலைவர், திரு. பி.ஈ.பி.மேனன் துவக்கஉரை நிகழ்த்தினார். பாண்டித்யம் படைத்த ஆச்சார்ய பெருமக்களின் உணர்வு பூர்வமானதும், அறிவு ரீதியானதுமான கருத்துக்கள் பரிமாறப்பட்டது. சீமாஜாகரண் அகில பாரத அமைப்பாளர் திரு.கோபாலகிருஷ்ணன் நிறைவுரை நிகழ்த்தினார்.
” ஹிந்து ஆலய ஆச்சார அனுஷ்டான விஷயங்களில் கருத்து கூறவோ, மாற்றம் கொண்டு வரவோ, எந்த ஒரு நீதிமன்றத்திற்க்கோ,மதசார்ப்பற்ற அரசிற்க்கோ உரிமையும் அதிகாரமும் இல்லை. பக்தர்களும், பக்த்ர்களை கொண்ட அமைப்புகளும் தான் அதை பற்றி கருத்து கூறவேண்டும். அப்படி வரக்கூடிய கருத்துக்களை பரிசீலனை செய்து உரிய பதில் அளிக்கவேண்டிய பொறுப்பு, தந்திரிகளுக்கும், ஆச்சார்ய சபைகளுக்கும் உண்டு. இறுதியாக இறை விருப்பம் அறிய கைதேர்ந்த ஜோதிடர்களின் குழுக்களை அழைத்து தேவ பிரஸ்ஸனம் பார்க்க வேண்டும். இது தான் கேரளாவில் காலம் காலமாக பின்பற்றி வந்த சம்பிரதாயம். மற்ற மாநிலங்களிலுள்ள பூஜை முறைகளில் இருந்து மாறுபட்டது கேரளா கோவில்களில் பின்பற்றும் பூஜை முறை. கேரளாவைசேர்ந்த கோவில்களில் உள்ள பூஜைமுறைகளில் இருந்து கூட மாறுபட்டு சிறப்புடையது சபரிமலை பூஜை முறை. ஆகவே, பல நூற்றாண்டுகளாக பின் பற்றி பாதுகாத்து வருகின்ற அறிவியல் ரீதியில் உள்ள ஆச்சார அனுஷ்டான முறைகளை, வெறும் எழுபது வருஷம் வயதுடைய ஜனநாயகத்தின் பெயரில், நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து மாற்ற நினைப்பது தவறு. இதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. பக்தர்கள் ஒருங்கிணைந்து இதை எதிர்க்க வேண்டும்.” இது, ஆச்சார்ய சபையின் உறுதியான முடிவு.
அதன்பிறகு, மீண்டும் சபரிமலை ஆச்சார ரக்ஷ வேதி, அடுத்த நாள்-24.06.2016- அன்று கூடியது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா,ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களிலும் ஆச்சார ரக்ஷ வேதி யின் மாநில , மாவட்ட கூட்டம் நடத்தவேண்டும். சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் முயற்சியில், மாநில ஆர். எஸ். எஸ் பொறுப்பாளர்கள் மற்றும் ஹிந்துமுன்னணி மாநில பொறுப்பாளர்களிடம் பேசி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கூட்டம் நடத்தி, அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்ப்பட்டவர்களின் ஒரு குழுவை நியமிக்க வேண்டும். 5 பெயர் உள்ள அக்குழுவில், ஒருவர் ஒருங்கிணைப்பாளர் ஆகவும், மற்ற 4 பேர்கள்( வெவ்வேறு இயக்கங்களிலிருந்து) துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகவும் இருப்பார்கள். எல்லா அமைப்புகளையும் கூட்டத்திற்கு அழைக்க வேண்டும். கூட்டம் நடைபெற்றது பற்றியும், அங்கு எடுக்கப்ப்ட்ட முடிவுகள் பற்றியும் எல்லா பத்திரிகை, டீ வீ க்களுக்கும் தெரியப்பெடுத்தி, செய்தி வர வைக்க வேண்டும்.
செயல் திட்டங்கள் :-
1. , உரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றி, ஹிந்து பக்தர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் ஒரு கோடி கையெழுத்து பெற்று, அதை ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைத்தல். (2 தமிழகத்தின் இலக்கு 40 லட்சம் கையெழுத்துக்கள்).
ஜூலை முதல் வாரத்தில் துவங்கி, 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். கையெழுத்து துவங்கும் காட்சி, செய்தி ஆகியவை பத்திரிகை டீ வீ க்களில் கொடுக்க வேண்டும்.
ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து 5-ம் தேதிக்குள் மாவட்ட அளவில் பெறப்பட்ட கையெழுத்துக்கள், ஒன்று சேர்த்தி, பண்டிலாக்கி மாநில தலைமைக்கு அனுப்ப வேண்டும். ஒரு பேப்பரில் 30 கையெழுத்து மட்டும் வாங்கவேண்டும். அதற்குரிய படிவம் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் பொறுப்பாளர்கள் கொடுப்பார்கள்.( தமிழ்நாடு இலக்கு 40 லட்சம் எனில், சுமார் ஒரு மாவட்டத்தின் இலக்கு 1.5 லட்சம்.அதாவது ஒரு பேப்பரில் 30 பேர்கள் என கையெழுத்திட்ட 5000 பேப்பர் நமது மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்க வேண்டும்.)
2. நமது மாவட்டத்திலுள்ள பெண்கள் அமைப்பை தொடர்ப்பு கொண்டு, அவர்கள் அவர்களுடைய கூட்டத்தில், சபரிமலைக்கு இளம் பெண்கள் செல்வதை விரும்பவில்லை, அது எங்கள் நம்பிக்கைக்கு எதிரானது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். பிறகு, அத்தீர்மானத்தின் நகல் அவர்கள் லெட்டெர்பேடில், பங்கெடுத்த அனைவரும் கையெழுத்து போட்டு 4 பிரதி எடுக்க வேண்டும். ஒரிஜினல் பிரதியை ” THE REGISTRAR,
, SUPREME COURT OF INDIA , TILAK MAARG , NEWDELHI -110201 என்ற முகவரிக்கு ரெஜிஸ்டர் தபால் ஆக அனுப்பி வைக்க வேண்டும். ஒரு பிரதியை அந்த அமைப்பின் கோப்பில் வைத்து, மீதி இரண்டு பிரதிகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒன்று மாவட்டத்தில் வைத்து மற்றதை மாநில தலைமைக்கு அனுப்ப வேண்டும்.
கையெழுத்து படிவமும், பெண்கள் அமைப்பு தீர்மானமும் அனுப்ப வேண்டிய
முகவரி:
வட தமிழ்நாடு
சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம்,
கேசவர் குடில்,
5. ரெங்கசாயீ தெரு,
பெரம்பூர்,
சென்னை – 600 011
மொபைல்: 7639800140, 9443357170.
தென் தமிழ்நாடு
சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம்,
91/5 கணபதி வில்லாஸ்,
குளத்துப்பாளையம் ரோடு, பி.கே.புதூர்,
குனியமுத்தூர்,
கோயமுத்தூர் -641 008மொபைல்: 9543180070, 9444240927
இந்த இரண்டு பணியும் உடனே செய்து முடிக்க வேண்டியது.
இதை தவிர, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்க, சபரிமலை பற்றிய ஒரு புத்தகத்தை தயார் செய்கிறோம்.
சபரிமலை பற்றி ஒரு கண்காட்சி டெல்லியில் நடத்த உள்ளோம்.
தேவை ஏற்படின், எல்லா மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகளை பங்குபெற வைத்து ஒரு சத்யாகிரஹம் கூட டெல்லியில் நடத்த தீர்மானித்துள்ளோம்.
மேலும் விபரங்கள் அறியவும் கலந்து பேசவும் என்னை தொடர்பு கொள்ளலாம். இரண்டு தமிழ்நாடு பொறுப்பாளர்களின் அலைபேசி எண் கீழே கொடுத்துள்ளோம்.
உத்தர் தமிழ்நாடு :
டீ.வீ.லக்ஷ்மிநாராயணன் ஜீ9543180070
துரைசங்கர் ஜி. 94442 40927.
ஈரோடு பாலுஜி 94879 31450
சிவராமன்,கடலூர்.94435 37588
தக்ஷிண தமிழ்நாடு :
சி. என். பரமசிவன்: 94433 57170
துரைசாமி,ராமநாதபுரம்.9442797564
பி. ஹரி 76398 00140
கணேசன் தேனி : 90250 09676
சுவாமியே சரணமய்யப்பா!!!!
பணிவன்புடன்,
ஈரோடு. என். ராஜன்.0 8086200107, 09443020118,0496 26 86 333
தேசீய பொதுசெயலாளர்,
சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம்.