அழுத குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற குடிகார கொடூர தந்தை…..!

dead bady 1 - 2026

சத்தம் போட்டு அழுததால் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற குடிகார தந்தையை போலீசார் கைது செய்தனா்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள், இந்நிலையில் நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் வீட்டில் மூன்று பெண் குழந்தைகளும் தந்தையும் மட்டுமே இருந்துள்ளனா். கடந்த வியாழக்கிழமை அன்று இரவு தந்தை அளவுக்கு மீறிய குடிபோதையில் வீட்டுற்கு வந்துள்ளார்.

அப்போது மூன்றாவது பெண் குழந்தையான ஒன்றரை வயது குழந்தை அதிக பசியால் துடித்து சத்தமிட்டு அழுது கொண்டே இருந்துள்ளது.

குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் கோபமடைந்த குடிகார தந்தை, அக்குழந்தையை தரையில் ஓங்கி துாக்கி அடித்துள்ளார்.

இதில் சம்பவ இடத்ததிலேயே ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.

இதனையடுத்து உயிரிழந்த குழந்தையின் உடலை அருகில் உள்ள சாக்கடையில் ஒளித்து வைத்துள்ளார். அந்த கொடூர தந்தை.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

வெள்ளிக்கிழமை அன்று காலை துப்பரவு பணிக்காக வந்த பணியாளா்கள் சாக்கடையில் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனா்.

இதனைதொடா்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதனை தொடா்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குடிகாரத் தந்தையே குழந்தையை அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

குழந்தையின் கொலையை நேரில் பார்த்த 3 மற்றும் 5 வயதான மற்ற இரு குழந்தைகளுகம் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனா்.

அளவுக்கு மீறிய போதையால் தான் பெற்ற பிஞ்சுக் குழந்தையை கொடூரமாக தந்தையே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories