December 6, 2025, 6:17 AM
23.8 C
Chennai

வலிமையான தலைமை என மோடியை புகழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ரியோ ஒலிம்பிக் 2016இல் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு நேற்று டெல்லியில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் இந்தி நடிகர் சல்மான் கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவின் போது வீரர், வீராங்கணைகளை உற்சாகப்படுத்தும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலொன்றையும் பாடினார்.

இதனை அடுத்து, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான்  ”ரியோ ஒலிம்பிக் 2016இல் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருக்கு” என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில், பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் தடுமாறி வருவதை சுட்டிக்காட்டியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், பிரதமர் மோடியை தீர்க்கமான தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் என்று அவரது பெயரை குறிப்பிடாமல் பாராட்டியுள்ளார்.

 

ஏ.ஆர்.ரஹ்மானின் முகநூல் பதிவின் தமிழாக்கம்:

”ரியோ ஒலிம்பிக் 2016இல் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருக்கு”

”உலகின் சக்திவாய்ந்த நாடுகளெல்லாம் தங்களது நாட்டை வழிநடத்த சிறந்த தலைவர் இல்லாமல் தடுமாறி வருவதுடன், தங்களது எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற சூழலில் சிக்கியுள்ள நிலையில், ஒன்றுபட்டு, தனது சக்தியை வெளிப்படுத்த இந்தியாவுக்கு இதுவே உகந்த தருணமாகும். நாட்டை வழிநடத்த தீர்க்கமான பார்வை கொண்ட தலைவர் அமைந்துள்ளது இந்தியாவிற்கு கிடைத்த நற்பேறு. 60 விழுக்காடு இளைஞர்களை கொண்ட இளமையான நாடாக இந்தியா திகழும் நிலையில், பாராட்டத்தக்க அம்சமாக இளைஞர்கள் விளையாட்டை தங்களது வாழ்க்கையாக தேர்ந்தெடுத்து வருகின்றனர். தேசிய விளையாட்டு வீரர்கள் தேர்வு திட்டம் போன்ற முன்னெடுப்புகள் சரியான திசையை நோக்கி பயணித்து வருகின்றன.

நினைவில் கொள்ளுங்கள், உங்களது மனதையும், ஆற்றலையும் ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் உலகில் எதுவுமே சாத்தியமற்றது அல்ல. உறுதியாக, விடாப்படியாக முயற்சி செய்தலே முக்கியமானதாகும். சிறிய விடயங்களுக்காக உங்களது மனது பலவீனப்பட்டு போகும்படி விட்டுவிட வேண்டாம். சில சோதனைகளை நீங்கள் எதிர்கொள்ளலாம். அவை உங்களது உள்ளுக்குள் நிகழக்கூடியது. உங்களின் அகவயமாக நிகழக்கூடிய இந்த போராட்டமானது, தெய்வீக வெளிப்பாடு போன்று தன்னை புறநிலையில் வெளிப்படுத்திக் கொள்ளும்.

இந்தியர்கள் ஆஸ்கர் விருதையோ, கிராமி விருதையோ பெறுவது சாத்தியமற்றது என ஒரு காலத்தில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், உள்ளார்ந்த ஈடுபாடு மற்றும் மிகச்சிறந்த தரத்தினால் இது சாத்தியமாகியுள்ளதை காலம் நிருபித்துள்ளது. நமது திறமைகள் மூலம் நம்மைநாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் நேரம் இது. இப்போது நம்மை எதுவும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

கடவுளின் அருளாளும், இந்திய மக்களின் வேண்டுதல்கள் மற்றும் அன்பாலும், எப்படி சாதிப்பது என்று உலகிற்கு நாம் காட்டுவோம்.”

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories