வலிமையான தலைமை என மோடியை புகழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ரியோ ஒலிம்பிக் 2016இல் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு நேற்று டெல்லியில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் இந்தி நடிகர் சல்மான் கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவின் போது வீரர், வீராங்கணைகளை உற்சாகப்படுத்தும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலொன்றையும் பாடினார்.

இதனை அடுத்து, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான்  ”ரியோ ஒலிம்பிக் 2016இல் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருக்கு” என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில், பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் தடுமாறி வருவதை சுட்டிக்காட்டியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், பிரதமர் மோடியை தீர்க்கமான தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் என்று அவரது பெயரை குறிப்பிடாமல் பாராட்டியுள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

 

ஏ.ஆர்.ரஹ்மானின் முகநூல் பதிவின் தமிழாக்கம்:

”ரியோ ஒலிம்பிக் 2016இல் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருக்கு”

”உலகின் சக்திவாய்ந்த நாடுகளெல்லாம் தங்களது நாட்டை வழிநடத்த சிறந்த தலைவர் இல்லாமல் தடுமாறி வருவதுடன், தங்களது எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற சூழலில் சிக்கியுள்ள நிலையில், ஒன்றுபட்டு, தனது சக்தியை வெளிப்படுத்த இந்தியாவுக்கு இதுவே உகந்த தருணமாகும். நாட்டை வழிநடத்த தீர்க்கமான பார்வை கொண்ட தலைவர் அமைந்துள்ளது இந்தியாவிற்கு கிடைத்த நற்பேறு. 60 விழுக்காடு இளைஞர்களை கொண்ட இளமையான நாடாக இந்தியா திகழும் நிலையில், பாராட்டத்தக்க அம்சமாக இளைஞர்கள் விளையாட்டை தங்களது வாழ்க்கையாக தேர்ந்தெடுத்து வருகின்றனர். தேசிய விளையாட்டு வீரர்கள் தேர்வு திட்டம் போன்ற முன்னெடுப்புகள் சரியான திசையை நோக்கி பயணித்து வருகின்றன.

நினைவில் கொள்ளுங்கள், உங்களது மனதையும், ஆற்றலையும் ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் உலகில் எதுவுமே சாத்தியமற்றது அல்ல. உறுதியாக, விடாப்படியாக முயற்சி செய்தலே முக்கியமானதாகும். சிறிய விடயங்களுக்காக உங்களது மனது பலவீனப்பட்டு போகும்படி விட்டுவிட வேண்டாம். சில சோதனைகளை நீங்கள் எதிர்கொள்ளலாம். அவை உங்களது உள்ளுக்குள் நிகழக்கூடியது. உங்களின் அகவயமாக நிகழக்கூடிய இந்த போராட்டமானது, தெய்வீக வெளிப்பாடு போன்று தன்னை புறநிலையில் வெளிப்படுத்திக் கொள்ளும்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியர்கள் ஆஸ்கர் விருதையோ, கிராமி விருதையோ பெறுவது சாத்தியமற்றது என ஒரு காலத்தில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், உள்ளார்ந்த ஈடுபாடு மற்றும் மிகச்சிறந்த தரத்தினால் இது சாத்தியமாகியுள்ளதை காலம் நிருபித்துள்ளது. நமது திறமைகள் மூலம் நம்மைநாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் நேரம் இது. இப்போது நம்மை எதுவும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

கடவுளின் அருளாளும், இந்திய மக்களின் வேண்டுதல்கள் மற்றும் அன்பாலும், எப்படி சாதிப்பது என்று உலகிற்கு நாம் காட்டுவோம்.”

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories