ஐ.எஸ்.,அமைப்புக்கு ஆள்சேர்த்த பெண் யாஸ்மினுக்கு 7 ஆண்டு சிறை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

yasmeenm - 2026கேரளத்தில் ஐஎஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெண் யாஸ்மினுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். என்ற இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் தங்கள் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக இவர்களது ஆதரவாளர்கள் பல்வேறு நாடுகளிலும் இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஐ.எஸ். அமைப்பில் சேர்த்து வருகிறார்கள்.

இவ்வகையில், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கேரளத்தில், ஐஎஸ்.,ஸின் நடவடிக்கைகள் அதிக அளவில் உள்ளன. லவ் ஜிஹாத் மூலமும், அடாவடி மதமாற்றம் மூலமும் இஸ்லாத்துக்கு பலரை மாற்றி வருகின்றனர். கேரளத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மெஜாரிடியாக உள்ளதால், இந்துக்கள் அங்கே மைனாரிடிகளாக மாறி வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பலரும் ஐ,எஸ்., ஆதரவு நபர்களால் மூளைச் சலவை செய்யப் பட்டு, ஆள்பிடிக்கும் வேலைகளில் பகிரங்கமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி, பலரும் வளைகுடா நாடுகளுக்கு அழைத்துச் செல்லப் படுவது போல் கூறி, ஐஎஸ்., பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.

கேரளத்தில் காசர்கோடு, கண்ணூர், பாலக்காடு உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு என்.ஐ.ஏ., அதிகாரிகள் கேரளாவில் விசாரணை நடத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

கேரளாவில் இருந்து பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தவர்கள் குறித்தும் பட்டியல் தயாரித்து, அவர்களைத் தேடி வருகிறார்கள். என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையில் கிடைத்த தகவலின்படி இதுவரை 98-க்கும் மேற்பட்ட கேரளத்தவர்கள் ஐ.எஸ். பயங்கவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் சிரியா, ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக போரில் ஈடுபட்டனர் என்றும், அவர்களில் 38 பேர் வரை போரில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Yasmine and Abdul - 2026இதனால், கேரளாவில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பவர்களைக் கைது செய்து வருகிறார்கள்.

பண்டைய திருவாங்கூர் ராஜ்ஜியமாக இருந்த தென் கேரளத்தில் இதன் தாக்கம் அதிகம் இல்லை என்றும், கொச்சின் மற்றும் மலபார் பிரதேசமாக இருந்து கேரளத்தில் இணைந்த வட கேரளப் பகுதியில்தான் ஐ.எஸ்., ஆள்சேர்ப்பின் தாக்கம் அதிகம் இருப்பதாகவும் கூறப் படுகிறது. அவ்வகையில், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த 15 இளைஞர்கள் கேரளாவை விட்டு வெளியேறி ஆப்கானிஸ்தானுக்கு சென்று அங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தனர்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இது குறித்த தகவல் கிடைத்ததும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் பிடித்துக் கொடுத்த, யாஸ்மின் முகம்மது சாகித் என்ற பெண்ணை கைது செய்தனர்.

பீகாரைச் சேர்ந்த இவர், கேரளத்தில் இருந்து கொண்டு, இந்த வேலையைச் செய்துள்ளார். இவர் கேரளாவில் இருந்து தில்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் யாஸ்மின் முகம்மது சாகித்துக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து யாஸ்மின் முகம்மது சாகித் கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை 3 ஆண்டுகளாகக் குறைத்தது.

இதை அடுத்து, கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக என்.ஐ.ஏ. அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதே போல், யாஸ்மின் தரப்பிலும் தனக்கு விதித்த சிறைத் தண்டனை குறித்து மேல்முறையீடு செய்யப் பட்டது.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

uu lalit indu malhotra - 2026மனுவை விசாரித்த நீதிபதிகள் யுயு லலித், இந்து மல்ஹோத்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு, யாஸ்மின் முகம்மது சாகித்துக்கு ஏற்கெனவே என்.ஐ.ஏ. நீதிமன்றம் வழங்கிய 7 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து, தீர்ப்பு வழங்கியது.


In the Kerala ISIS recruitment case, the Supreme Court today upheld the conviction of Yasmeen Mohammad Zahidi under Section 120B of Indian Penal Code and Section 38 of Unlawful Activities (Prevention) Act (UAPA). The Court also restored the order of NIA Court with respect to the sentence of seven years rigorous imprisonment handed down to Zahidi.


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories