ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் மசரத் ஆலம் வெள்ளிக்கிழமை நேற்று கைது செய்யப்பட்டார். இதை அடுத்து, காஷ்மீர் பிரிவினைவாத ஹூரியத் மாநாடு தலைவர் சையத் அலி ஷா கிலானி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால், காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை மசரத் ஆலம் கலந்து கொண்ட கூட்டத்தில், பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்களும், பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டும் பரபரப்பை ஏற்படுத்தியதால், பிரிவினைவாதி மசரத் ஆலம் கைது செய்யப்பட்டு நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். அதை அடுத்து அவரை நீதிமன்றம் 7 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதை அடுத்தே கிலானி காஷ்மீரில் பந்த் நடத்த அழைப்பு விடுத்தார். இதனால் இன்று காஷ்மீர் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் மசரத் ஆலம் பட் ஸ்ரீநகரில் நேற்று கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஸ்ரீநகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் கொடி பறக்கவிடப்பட்டு, ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டது தொடர்பாக கிலானி, மசரத் ஆலம் பட் உள்ளிட்டோர் மீது பட்காம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து தேச விரோத செயலில் ஈடுபட்டதாக மசரத் ஆலம் பட் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை ஹப்பாகடல் பகுதி யில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார் அவரை கைது செய்தனர். கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மசரத் ஆலம் … இது புதுமையானது அல்ல. அதிகார பலத்தில் காஷ்மீரில் ஆட்சி நடத்தப்படுகிறது. பாகிஸ்தான் தேசியக் கொடியை பறக்க விடுவதும் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் போடுவதும் விடுதலை முழக்கம் எழுப்புவதும் 1947-ஆம் ஆண்டிலிருந்தே நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்.
மசரத் ஆலம் கைது; முழு அடைப்புக்கு கிலானி அழைப்பு: காஷ்மீரில் உச்சபட்ச பாதுகாப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari