December 5, 2025, 6:01 PM
26.7 C
Chennai

அதிமுக.,வில் இருந்து வந்தவர்களுக்கு திமுக.,வில் பதவிகள்..! பதவி கேட்டு இணையவில்லை என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்!

thangathamilselvan stalin - 2025

அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு திமுகவில் கட்சிப் பதவிகள் கொடுக்கப் பட்டுள்ளன. இதனை திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பில் தங்க.தமிழ்செல்வன் நியமனம்! கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் பொறுப்பில் வி.பி.கலைராஜன் நியமனம்! கழக நெசவாளர் அணிச் செயலாளர் பொறுப்பில்கே.எம்.நாகராஜன் நியமனம் என திமுக., அதிரடி காட்டியுள்ளது.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்களாக பணியாற்றி வரும் திருச்சி சிவா, ஆ.இராசா ஆகியோருடன் இணைந்து, கட்சி சட்டதிட்ட விதி 26ன்படி தி.மு.க. கொள்கைப் பரப்பு செயலாளராக தங்க. தமிழ்ச்செல்வன் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கட்சி சட்டதிட்ட விதிகளின்படி, திமுக இலக்கிய அணி இணைச் செயலாளராக வி.பி.கலைராஜன் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. நெசவாளர் அணிச் செயலாளராக, கோவை மாவட்டம் குள்ளக்காபாளையத்தை சேர்ந்த கே.எம். நாகராஜன் நியமிக்கப்படுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

07 June 29 Thanga tamilselvan - 2025

இந்நிலையில் கட்சிப் பதவி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச் செல்வன், மு.க.ஸ்டாலினிடம் எந்த பதவியும் கேட்டு நான் திமுகவில் இணையவில்லை; கட்சியின் கொள்கை பொறுப்பு செயலாளர் பதவி வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி என்று கூறினார்.

திமுக., கொள்கை பரப்புச் செயலாளர் என தனக்கு கட்சிப் பதவி வழங்கப் பட்ட பின்னர், மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.

முன்னதாக, அமமுக.,வில் இருந்து வெளியேறி திமுக.,வில் சேர்ந்தார் தங்க தமிழ்ச்செல்வன். அப்போது அவர், கொள்கையே இல்லாத தினகரன் கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் எதற்கு என்று கேள்வி கேட்டு அதிர வைத்தார்.

மேலும், பதவியை எதிர்பார்த்தே தாம் திமுக.,வில் இணைவதாகவும், ஸ்டாலின் எனக்கு ஏதாவது பாத்து செய்வார் என்ற ரீதியில் முன்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார் தங்க தமிழ்ச்செல்வன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories