December 5, 2025, 9:28 PM
26.6 C
Chennai

3 செண்ட் நிலம் தர்றோம்னீங்களே..! எங்கே நிலம்?! செந்தில் பாலாஜியை சுளுக்கெடுத்த கரூர் அப்பாவிகள்!

senthilbalaji karur4 - 2025

கரூர் அருகே தி.மு.க எம்.எல்.ஏ க்களை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. 3 செண்ட் நிலம் இலவசமாகக் கொடுப்பதாகக் கூறி ஆசை காட்டி வாக்குகளைப் பெற்ற செந்தில்பாலாஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆங்காங்கே 3 செண்ட் நிலம்? எங்கே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும், பதவி வகித்து
வருகிறார். அவர் அ.தி.மு.க வில் இருந்து அமமுக கட்சி மாறி, தற்போது தி.மு.க.,வில் இணைந்த உடனே தி.மு.க மாவட்ட பொறுப்பாளராக பதவியிலும் அமர்ந்துவிட்டார். இது தி.மு.க.,வினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது .

இந்த நிலையில், உடனே அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலிலும், செந்தில் பாலாஜிக்கே சீட்டு கிடைத்தது. இதனால் மேலும் அதிருப்தி அடைந்தனர் திமுக., பழந் தொண்டர்கள். இந்நிலையில் அனைவருக்கும் 3 செண்ட் நிலம் இலவசம் என்று அறிவித்த செந்தில் பாலாஜி, மாநிலத்தில்
இந்த 22 தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் தி.மு.க., எப்படியும் வெற்றி பெற்று விடும் என்றும், மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறி, அதற்காக மனம் போன போக்கில் இலவசங்களை தாராளமயமாக்கினார்.

senthilbalaji karur3 - 2025

திமுக., சொன்ன இலவச வாக்குறுதிகளில் ஆகப் பெரிய வாக்குறுதியாக, கரூர் பகுதி மக்களிடம், 3 செண்ட் நிலம் என்ற வாக்குறுதி திகழ்ந்தது. இதனை திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் வாயாலேயும் சொல்ல வைத்தார் செந்தில் பாலாஜி.

ஆனால் திமுக.,வினர் எதிர்பார்த்ததற்கு மாறாக, மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைந்தது. மாநிலத்திலோ அதே எடப்பாடி பழனிச்சாமிதான். இந்நிலையில், 25 ஆயிரம் நபர்களுக்கு 3 செண்ட் நிலம் லட்சியம், 10 ஆயிரம் பேருக்கு நிச்சயம் என்று உறுதிமொழியை அள்ளிக் கொடுத்தார் செந்தில் பாலாஜி.

senthilbalaji karur2 - 2025

ஆனால் வாக்கு கேட்டு மட்டுமே அரவக்குறிச்சி வந்தவர், தி.மு.க வினரின் இல்லத் திருமணங்கள் மற்றும் விஷேசங்களுக்கு மட்டுமே சென்றவர், வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க வரவில்லை, அட நன்றி கூட சொல்லவில்லை என்று கோபத்தில் குமுறுகின்றனர்.

செந்தில் பாலாஜியின் பொய்களை நம்பி வாக்களித்துவிட்டோமே என்ற கோபம் ஒரு புறம் என்றால், 3 செண்ட் நிலம் எங்கே என்ற கோபமும் மறு புறம் கிளர்ந்தெழுந்துள்ளது. இந்நிலையில் இன்று, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெடுங்கூர் பகுதியில் தமிழக அரசு ஏற்கனவே தூர் வாரும் திட்டத்தினை கையில் எடுத்த நிலையில், இன்று அதே பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் ஏரி தூர்வாருவதாக கூறி தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளரும், திருவரம்பூர் தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ வும், கரூர் மாவட்ட தி.மு.க செயலாளருமான செந்தில் பாலாஜி ஆகியோர் சென்றனர்.

senthilbalaji karur1 - 2025

அப்போது வழிநெடுகிலும் செந்தில் பாலாஜி, மகேஷ் பொய்யாமொழி ஆகிய எம்.எல்.ஏ க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 3 செண்ட் நிலம் தருவதாக சொன்ன செந்தில் பாலாஜி, எங்கே 3 செண்ட் நிலம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முற்றுகையிட முயன்றனர்!

இந்தச் சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதனையடுத்து காவல்துறையினர் உதவியுடன் அந்தப் பகுதியிலிருந்து தி.மு.க எம்.எல்.ஏ க்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பாதுகாப்புடன் வெளியேறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories