‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்..! சாமியார் மீது வழக்குப் பதிவு!

irulappasamy3 - 2026

சிவகங்கை மாவட்டம் பாசாங்கரையில் ஜீவசமாதி அடையப் போவதாகக் கூறி, பொது மக்களை ஏமாற்றி உண்டியல் காசு வசூல் செய்தார் என்று, திடீர் பரபரப்பைக் கிளப்பிய சாமியார் இருளப்பசாமி, அவரது மகன் உள்பட 7 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் பாசாங்கரையில், இருளப்பசாமி என்பவர், செப்.13ஆம் தேதி நள்ளிரவு முதல் காலை 5 மணிக்குள் தாம் ஜீவசமாதி அடையப் போவதாக 10 நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஜீவசமாதி அடைந்த மகான்களின் சமாதிகளுக்குச் சென்று, தாங்கள் நினைத்தது நடந்தேற பிரார்த்தனை செய்து, அவ்வாறே பலருக்கும் நடந்துள்ளது.

இதனால் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற எண்ணத்தில் இருந்த சாதாரண மக்கள், இது போல் சாமியார் ஒருவர் ஜீவசமாதி அடைவதைப் பார்த்து, தங்கள் மனசில் உள்ள விருப்பங்கள் நிறைவேற பிரார்த்தனை செய்யலாம் என்று பாசாங்கரையில் குவிந்தனர்.

தொடர்ந்து இருளப்பசாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிச் சென்ற வண்ணம் இருந்தனர். சாமியார் இருளப்பசாமி ஜீவசமாதி அடைவதற்காக 10 அடி நீளம்,10 அடி அகலம் கொண்ட குழியும் தோண்டப்பட்டு ஜீவசமாதிக்கான ஏற்பாடுகல் செய்யப் பட்டன.

Jeeva Samadhi cheating case against irulappasami son - 2026

சட்ட ரீதியாக இது போன்று ஜீவசமாதி அடைதல் என்பது தவறென்றாலும், இது ஒரு தரப்பின் ஆன்மிக நம்பிக்கையின் பால் மேற்கொள்ளப் படுவது என்பதால், 13ஆம் தேதி நள்ளிரவு மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், காவல் அதிகாரிகள் உள்ளிட்டோரும் அங்கே காத்திருந்து, அங்கே மேற்கொள்ளப் படும் சடங்குகள் குறித்து கண்காணித்து வந்தனர்.

ALSO READ:  அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.ஜீவசமாதி அடைவதாக கூறிய இருளப்பசாமியின் உடல்நலம் குறித்து டாக்டர்களும் அவ்வப்போது பரிசோதித்த வண்ணம் இருந்தனர்.

இருளப்பசாமியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவர் எப்போதும் போல் காணப் பட்டார். இருப்பினும், தன்னை குழிக்குள் வைக்கும் படி நள்ளிரவு 1 மணிக்கு இருளப்பசாமி கூறினார். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். தொடர்ந்து காலை 5.30 மணி வரை ஆட்சியர் மற்றும் பொதுமக்கள் காத்திருந்த போதும் ஜீவசமாதிக்கான நிலையை இருளப்பசாமி எட்டவில்லை.

irulappasami sivagangai - 2026

இதை அடுத்து, கூட்டத்தை கலைந்து செல்ல அறிவுறுத்தினார் ஆட்சியர் ஜெயகாந்தன். அவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். எனினும் ஜீவசமாதிக்கு முயன்ற சாமியார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஆட்சியர் மக்களிடம் கூறினார்.

குறிப்பிட்ட நேரம் முடிந்து விட்டதால், இன்னொரு நாளில் ஜீவசமாதி அடையப் போவதாகக் கூறினார் இருளப்பசாமி. இதனால் அவர் ஜீவசமாதி அடைவதைக் காண வந்திருந்த அன்பர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

இதனிடையே, ஜீவசமாதி என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி உண்டியல் பணம் வசூலித்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், இருளப்பசாமி, அவரது மகன் கண்ணாயிரம் உள்ளிட்ட 7 பேர் மீது சிவகங்கை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories