பேச மறுத்ததால் காதலி கழுத்தை அறுத்துக் கொன்ற இளைஞர்!

சென்னை :

சென்னையில் பரபரப்பான பெருங்குளத்தூர் பஸ் ஸ்டாண்டில் தன்னிடம் பேச மறுத்ததால் இளம்பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த இளைஞர் போலீஸாரிடம் சரண் அடைந்தார்.

சென்னை நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் சோனியா (23). இவர் தாம்பரத்தில் உள்ள கடை ஒன்றில் சேல்ஸ்கேர்ளாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு வீடு திரும்புவதற்காக பெருங்குளத்தூர் பஸ் ஸ்டாண்டில் நின்றுள்ளார். அப்போது அங்கே பைக்கில் வந்த பிரசாத் (24) என்ற இளைஞர், பைக்கில் ஏறும்படி சோனியாவை அழைத்துள்ளார். அதற்கு சோனியா மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரசாத், கத்தியால் சோனியாவின் கழுத்தை அறுத்து விட்டு, பைக்கில் தப்பிச் சென்றுள்ளார். அவரை பிடிக்க அருகில் இருந்தவர்கள் முயன்றும், முடியவில்லை.

தப்பிச் சென்ற பிரசாத் பீர்கங்கரை போலீஸ் ஸ்டேஷனில் சென்று சரணடைந்துள்ளார்.
அங்கு அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, பிரசாத், கூடுவாஞ்சேரியில் உள்ள ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவரும் சோனியாவும் ஒரே பகுதியில் வசித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் 6 ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். பிரசாத், சோனியாவை தனது பைக்கில் அழைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பிரசாத்தின் நடவடிக்கை பிடிக்காததால், கடந்த சில வாரங்களாக சோனியா, பிரசாத்துடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். பிரசாத்தின் தொலைப்பேசி அழைப்பையும் சோனியா தவிர்த்து வந்துள்ளார். இதனால் நேற்று அவரை பின்தொடர்ந்து வந்த பிரசாத், பைக்கில் ஏறும்படியும், தன்னை காதலிக்கும் படியும் வற்புறுத்தி உள்ளார். இதற்கு சோனியா மறுத்ததால், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சோனியாவை, அருகில் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே சோனியா உயிரிழந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் இதே போல் ஒருதலைக் காதலால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென்பொறியாளர், ராம்குமார் என்ற இளைஞனால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories