சென்னை: கடலோர போலீசாருக்கான பயிற்சி மையம் ராமேசுவரத்தில் 237 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இது இந்தியாவிலேயே முதலாவதாக அமையவுள்ள பயிற்சி மையம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரம் ஒலைக்குடா தரவை பகுதியில் கடலோர போலீசாருக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் அளிக்க கடலோர போலீஸ் பயிற்சி மையம் கட்டப்பட உள்ளது. இதற்காக சுமார் 237 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணிகளை மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மாநில அரசு மேற்கொண்டுள்ளது. தமிழக கடலோர போலீசாரின் பாதுகாப்பு வசதிக்காக ஒலைக்குடா கடற்கரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் தொலைத்தொடர்பு மையம் கட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டு அதற்கான இடம் ஒதுக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில் அங்கு கடந்த 1 மாதமாக 24 மணி நேரமும் கடலோர போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி பாதுகாப்புக்காக உச்சிப்புளியில் 2 ரோந்து ஹெலிகாப்டர்களுடன் இந்திய கடற்படைக்கு சொந்தமான விமான தளம், மண்டபத்தில் 10-க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களை கொண்ட கடலோர காவல்படை நிலையம், இதுதவிர ராமேசுவரத்தில் 3 ரோந்து படகுகள் கொண்ட கடற்படை நிலையம் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் கடலோர பகுதி மற்றும் கடற்கரை பகுதி பாதுகாப்புக்காக தேவிபட்டினம், மண்டபம் என இரண்டு இடங்களில் கடலோர காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ரோந்து படகுகளிலும் கடலோர போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
கடலோர போலீஸாருக்கான பயிற்சி மையம்: நாட்டில் முதலவதாக ராமேஸ்வரத்தில் அமைகிறது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari