January 17, 2025, 7:03 AM
24 C
Chennai

கடலோர போலீஸாருக்கான பயிற்சி மையம்: நாட்டில் முதலவதாக ராமேஸ்வரத்தில் அமைகிறது

சென்னை: கடலோர போலீசாருக்கான பயிற்சி மையம் ராமேசுவரத்தில் 237 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இது இந்தியாவிலேயே முதலாவதாக அமையவுள்ள பயிற்சி மையம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரம் ஒலைக்குடா தரவை பகுதியில் கடலோர போலீசாருக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் அளிக்க கடலோர போலீஸ் பயிற்சி மையம் கட்டப்பட உள்ளது. இதற்காக சுமார் 237 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணிகளை மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மாநில அரசு மேற்கொண்டுள்ளது. தமிழக கடலோர போலீசாரின் பாதுகாப்பு வசதிக்காக ஒலைக்குடா கடற்கரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் தொலைத்தொடர்பு மையம் கட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டு அதற்கான இடம் ஒதுக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில் அங்கு கடந்த 1 மாதமாக 24 மணி நேரமும் கடலோர போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி பாதுகாப்புக்காக உச்சிப்புளியில் 2 ரோந்து ஹெலிகாப்டர்களுடன் இந்திய கடற்படைக்கு சொந்தமான விமான தளம், மண்டபத்தில் 10-க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களை கொண்ட கடலோர காவல்படை நிலையம், இதுதவிர ராமேசுவரத்தில் 3 ரோந்து படகுகள் கொண்ட கடற்படை நிலையம் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் கடலோர பகுதி மற்றும் கடற்கரை பகுதி பாதுகாப்புக்காக தேவிபட்டினம், மண்டபம் என இரண்டு இடங்களில் கடலோர காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ரோந்து படகுகளிலும் கடலோர போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

ALSO READ:  பரணி மகா தீபத்துக்கு இத்தனை பேர் தான் அனுமதியாம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

கோயிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்; அரசு தலையிட கோரிக்கை!

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம் தொடர்பில் பிரச்னை ஏற்பட்டது.

அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் – இழுத்து மூடல்!

பாரதத்தை - குறிப்பாக அதானியை - குறி வைத்த ஹிண்டன்பர்க் பயல் கடையை மூடி ஓட்டம்.... டிரம்ப் வருவதற்குள் டீப் ஸ்டேட் கூட்டங்கள் ஓடத் துவங்கியிருக்கின்றன.

பிப்.9ல் நெட்டாங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா பஜனாம்ருதம் போட்டிகள்!

கன்யாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் பொங்கல் விழா-2025

பெரியாரைத் துணைக் கொள்! அரசியலில் புது அர்த்தங்கள்!

ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தத்தில் ஒளவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!