தலைமன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை சனிக்கிழமி அன்று, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். ராமேசுவரம் மீனவர்கள் சனிக்கிழமை 662 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு, தலைமன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 7 சிறிய கப்பல்களில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 100-க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். மீனவர்கள் வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர். பின்னர் மீனவர்களை எச்சரித்து விரட்டியடித்தனர். பகல் முழுதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் அந்தப் பகுதியில் இருந்து சென்றதும் கடலில் வெட்டி வீசப்பட்ட வலைகளை சேகரித்து ஞாயிறு காலை மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
Popular Categories