‘பஞ்சமி’ விவகாரத்தில் திமுக.,வை ‘காப்பாற்றும்’ வேலையில் அதிமுக., அரசு?!

stalin edappadi - 2026

திமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்றும், திமுக., சமூக நீதி என்று கூறி இரட்டை வேடம் போடுவதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. அதை அடக்குவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தது திமுக.,!

பாமக., நிறுவுனர் ராமதாஸ் கிளப்பிய ஒரு தீப்பொறி, பாஜக., மாநில செயலர் மதுரை பேராசிரியர் சீனிவாசனால் மேலும் பெரிதாக்கப் பட்டது. தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையத்தில் பஞ்சமி நிலம் குறித்து விசாரித்து அறிய வேண்டும் என்று புகார் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஆணையம். ஆனால், அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது.

மேலும், அரசு நிர்வாக ரீதியில், திமுக.,வுக்கு உதவுவது போல் கூறப் படுகிறது. இதனை இன்றைய திமுக., பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலினே உறுதி செய்திருக்கிறார்.

“முரசொலியை மூடுவோம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்; அதை பூட்டுப் போட விடுவோமா? முரசொலி இருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என அரசு கண்டுபிடித்திருந்தால், அதை வெளியிடாமல் இருப்பார்களா? – என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம், அதிமுக., அரசு, திமுக.,வை பிரச்னையில் இருந்து காப்பாற்ற ரகசிய வேலைகளைச் செய்து வருவது, ஸ்டாலின் வாக்கில் இருந்தே வெளிப்பட்டிருக்கிறது என்று கூறுகின்றனர்.

இதனிடையே, இதை உறுதிப் படுத்துவது போல், பாஜக.,வைச் சேர்ந்த தலித் தலைவரான தடா பெரியசாமி, தமிழக தலைமைச் செயலாளர் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் தற்போதைய சென்னை மாவட்டத்தில் பஞ்சமி நிலம் இல்லை என தகவல் கொடுத்து விடக் கூடாது… என்று தனது ஐயத்தையும் சேர்த்தே வெளிப்படுத்தி, கோரிக்கை விடுத்திருக்கிறார்.

tada periyasami arjunsampath - 2026
தடா பெரியசாமி, அர்ஜுன் சம்பத் … கோப்பு படம்!

இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது…

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பற்றிய ஆவணங்களை வருகிற 19-11-2019 அன்று நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நான் பஞ்சமி நிலம் பற்றிய தகவல்கள் தமிழ்நாடு முழுவதும் திரட்டி வைத்துள்ளேன் அத்தகவல்களை 19-11-2019 அன்று நேரில் சமர்பிக்க என்னை அழைக்க வேண்டுமென்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு மனு கொடுத்துள்ளேன்.

தமிழக தலைமைச்செயலாளர் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் தற்போதைய சென்னை மாவட்டத்தில் பஞ்சமி நிலம் இல்லை என தகவல் கொடுத்து விடக் கூடாது. பழைய செங்கல்பட்டு ஜில்லா ஆவணங்களில் இருந்து சமர்பிக்க வேண்டும். அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. – என்று தடா பெரியசாமி கூறியுள்ளார்.

தடா பெரியசாமி கொடுத்துள்ள மனு…

thadaperiyasamy - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories