சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து இன்று திமுகல், கம்யூ., பாமக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சட்டப்பேரவையில் இன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கட்டடம் இடிந்த விபத்து தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதன்பின்னர் மு.க.ஸ்டாலின் எழுந்து, இன்னும் 2 நாள்தான் அவை நடவடிக்கைகள் உள்ளன. எனவே தி.மு.க. கொடுத்துள்ள கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். அது பரிசீலனையில் உள்ளது என்று அவைத்தலைவர் தெரிவித்தார். அப்போது துரை முருகன் எழுந்து வேலூர் அருகே மாவட்ட ஆட்சியர் கார் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான பிரச்னை குறித்துப் பேசத் தொடங்கினார். அவைத்தலைவர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், தற்போது அவையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. நாங்கள் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு, குடிநீர் பிரச்னை, ரேஷன் கடையில் பருப்பு தட்டுப்பாடு, விவசாய அதிகாரி தற்கொலை, வேலூரில் கலெக்டர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்து போன்ற பல்வேறு கவன ஈர்ப்பு தீர்மானங்களைக் கொடுத்திருக்கிறோம். அது பற்றி பேச அனுமதி கேட்டால் அது ஆய்வில் இருக்கிறது என்று அவர் கூறுகிறார். இன்னும் 2 நாள்தான் அவை இருக்கிறது. எனவே, இது பற்றி பேச அனுமதி தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம் என்றார். நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரும் பிரசனை தொடர்பாக் மார்க்சிஸ்ட்டும் வெளிநடப்பு செய்தது. பாமகவின் கணேஷ் குமார் எம்.எல்.ஏ.வும் இதே பிரச்னைக்காக வெளிநடப்பு செய்தார்.
சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க., கம்யூனிஸ்டு., பா.ம.க வெளிநடப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari