மகாராஷ்டிராவில் அதிரடி! மீண்டும் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ்!

Published:

IMG 20191123 084704 - 2026
Pic shared via ani Twitter image

பாஜக அதிரடி! மகாராஷ்டிராவில் மீண்டும் முதல்வராக பதவியேற்றார் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்!

திடீர் திருப்பம்! சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே இன்று முதல்வர் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேசியவாத காங்கிரஸ் தனது நிலையை மாற்றி பாஜகவிற்கு ஆதரவு அளித்தது.

மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் (பாஜக) மற்றும் துணை முதல்வர் அஜித் பவாருக்கு (தே.வா.காங்கிரஸ்) பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

அமைதியாக இருந்து காரியம் சாதித்தது பாஜக!

நீண்ட இழுபறியாக நீடித்த மகாராஷ்டிரா முதல்வர் பதவி விவகாரத்தில் பாஜகவின் செயல்பாடு இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

“மகாராஷ்டிராவில் நிலையான அரசு அமைய வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் தெரிவித்துள்ளார்

  • மீண்டும் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்
  • தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி
  • நேற்று வரை சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்த சரத்பவார், பாஜகவுக்கு ஆதரவளிக்க திடீர் முடிவு
  • ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

Related articles

Recent articles

spot_img