சென்னை:
அதிமுகவின் பொதுச் செயலராக ஆன சசிகலா, தமிழகத்தின் முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஜனநாயக படுகொலை. எது எப்படி நடந்து இருந்தாலும் முறைப் படி தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள்தான் முதல்- அமைச்சர் ஆக வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் போராடினார்கள். அது போன்று இதற்கும் அழைப்பு விடுக்க வேண்டும்! இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
Democracy was just murdered..whatever happened 2 the constitution where the CM was elected by the people..
— khushbusundar (@khushsundar) February 5, 2017
Refuse 2 comment any further on the happenings in TN n waste my time..I better save it 4 something concrete..sme ppl r sheer waste of time..
— khushbusundar (@khushsundar) February 5, 2017



