நெல்லை : தாழையூத்து அருகே 30 டன் சர்க்கரையுடன் சாலையோர கிணற்றில் மூழ்கியது லாரி ஒன்று.
நாமக்கல்லில் இருந்து நெல்லை நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சர்க்கரை ஏற்றி வந்த லாரி சாலையோர கிணற்றில் மூழ்கியது.
ஓய்வெடுப்பதற்காக சாலையோரமாக லாரியை ஓட்டுநர் நிறுத்தியபோது கிணற்றில் கவிழ்ந்ததாகத் தெரியவருகிறது.
தற்போது அந்த லாரியை கிணற்றில் இருந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.