ஹைட்ரோ கார்பன் திட்டம் ஒரு பார்வை

இயற்கை எரிவாயுதான் ஹைட்ரோ கார்பன் வாயு  எனறு வேதியியல் பெயரில் அழைக்க்கப்படுகிறது.
1. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80%. இறக்குமதி மூலமாகதான் சமாளிக்கின்றோம். இதை இறக்குமதி செய்வதற்காக பல லட்சம் கோடி ரூபாய் வருடத்திற்க்கு அன்னிய செலாவனி தேவைபடுகின்றது.
2.  இந்தியாவிலேயே  எண்ணெய் வளங்களை கண்டு அதை எடுக்கும் பணியை ONGC மற்றும் IOC போன்ற பொதுத்துறை நிறுவனங்களே செய்துவந்தன. 
3. 1991 பிறகு புதிய பொருளாதார கொள்கைகள் உருவான பிறகு இந்தியாவில் சுமார் 28 தனியார் எண்ணெய் நிறுவணங்களும் கச்சா எண்ணெய் உற்பத்தி துறையில் ஈடுபட துவங்கின.
4.1997 ஆம் ஆண்டு இந்தியாவின் தேவைக் கான கச்சா எண்ணெய் உற்பத்தியை நம் நாட்டிலேயே அதிகபடுத்தும் நோக்கோடு பல  முறைபடுத்தும் நோக்கோடும் New Exploration Policy ஒன்றை உருவாக்கியது..
5. அது 1998 ல் அமலுக்கு வந்தது. அதனடிப்டையில் சிறிய அளவிலான எண்ணெய் கிணறுகள் மற்றும் எண்ணெய்/வாயு கிடைக்கும் இடங்களை சர்வதேச டெண்டர் மூலம் ஏலம் விட முடிவு செய்யப்பட்டு அதிலே அரசுக்கு Revenue sharing முறையில் வருமானத்திற்க்கு வழி செய்யப்பட்டது…
6. இந்த New Exploration policy நடைமுறைக்கு வந்த இந்த 20 ஆண்டுகளில் 9 முறை 
பல Blocks சர்வதேச டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் Onshore and off shore block களும் அடங்கும்.
7.  தமிழ் நாட்டில் பல்லாண்டு காலமாக ONGC மற்றும் அரசு துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வுகள் நடத்தி வந்து கொண்டிருக்கின்றன. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் எண்ணெய் மற்றும் எரிவாயு தமிழ்நாட்டில் எடுக்க பல ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்யப்பட்டு  தமிழ் நாட்டில் தற்போது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிலங்கள் செயல் பாட்டில் உள்ளவை 31. 
8. இந்த Oil and Natural gas fields புவனகிரியிலிருந்து ராமனாதபுரம் வரையில் பரவலாக அமைந்துள்ளது. இதில் நரிமணம் Oil and Gas Field நமக்கு பரிச்சயமான பெயர்..
9. இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு வயல் களிலிருந்து ஒரு நாளைக்கு 700 டன் எண்ணெய் எடுக்கப்படுகிறது. அதே போல் 3.8 மில்லியன் கன மீட்டர்  இயற்கை எரி வாயு தினம் எடுக்கப்படுகின்றது..இதில் உற்பத்தியாகும் எரிவாயு மூலம் தமிழகத்தில் மின்சார தேவைகாக 650 முதல் 700 மெகாவாட் மின் சாரம் தயாரிக்க பயன் படுகின்றது. தமிழ் நாட்டு அரசுக்கு ராயல்டி மற்றும் வாட் வரி மூலம் 5 ஆண்டுகளில் 1768 கோடி ரூபாய் ONGC மூலம் வருமானம் கிடைத்துள்ளது.
10. இந்த நிலையில் மத்திய அரசு New exploration policy யில் உள்ள அரசுக்கும் நாட்டிற்க்கும் பாதகமாக உள்ள அம்சங்களை நீக்கி  சிறந்த கொள்கை முடிவை எடுக்க முடிவு செய்தது. அதன் அடிப்படையில் தான் New Hydrocarbon exploration and licensing policy 2015 ல் உருவாக்கப்பட்டது. மேலும் இந்தியா கச்சா எண்ணெய்காக 80% இறக்குமதியை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கும் நிலையை படிப்படியாக குறைக்க வேண்டும் என முடிவு செய்து 2022 க்குள் 80% லிருந்து இறக்குமதியை 67 % ஆக குறைக்க முடிவு செய்துள்ளது…
11. நெடுவாசல் விஷயத்தை பொருத்தவரை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே அங்கே எண்ணெய் எரிவாயு கிடைப்பதை ONGC நிறுவனம் உறுதி செய்தது. ஆகவே ஏதோ இப்போது தான் மோடி அரசுதான் இந்த திட்டத்தை இங்கு கொண்டு வந்தது என்பது உண்மையில்லை….ஏற்கெனவே தமிழ் நாட்டில் 31  Oil and Gas fields செயல்பாட்டில் உள்ளது. எனவே இது முதல் திட்டம் அல்ல….
12. மேலும் தமிழ் நாட்டில் மட்டும் தான் எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் தங்களுடைய வேலையை தொடங்க Consent to operate என்ற Certificate யை மாநில அரசிடமிருந்து பெறவேண்டும். மாநில அரசு அனுமதி கொடுத்த பிறகே இந்த பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது……
13. கம்யூனிஸ்ட் கட்சிகளும் சில இயக்கங்களும் மத்திய மோடி அரசு தமிழக விவசாயிகளை இந்த திட்டத்தின் மூலம் வஞ்சிக்கிறது என்று தவறான தகவலை பரப்பி ஏமாற்றுகிறது. நான் ஏற்கெனவே குறிப்பிட் படி தமிழ் நாட்டில் ஏற்கெனவே 31 Hydrocarban oil fields உள்ளது. அவைகளெல்லாம் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன…..
கொசுரு செய்தி :
_________________
              கம்யூனிஸ்டுகள் ஆண்ட மேற்கு வங்காளத்தில் பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரானிகன்ஜ் என்ற இடத்தில் மீத்தேன் எரிவாயு திட்டம் மிகப் பெரிய அளவில் செயல்பட்டு கொண்டிருக்கிறது…….அங்கே மீத்தேன் எரிவாயு திட்டத்தை அனுமதித்தது யார் என்பது சொல்லி தெரிய வேண்டுமா?
ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories