வங்கிப் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணமா? என்று ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது பணத்தை ஒரே தவணையில் எடுத்துவிட்டால், வங்கிகள் மகிழ்ச்சியடையுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், மாதத்தில் 4 தவணைகளுக்கு மேல் பணம் எடுத்தாலும், செலுத்தினாலும் 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கின்றன. இதற்கு வாடிக்கையாளர்கள் தரப்பில் அதிருப்தி எழுந்துள்ள நிலையில், ப.சிதம்பரம் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.



