கடலூர் பாம்பு மன்னன் என அழைக்கப்படும் பூனம்சந்த், பாம்புகளை யாரும் கொல்லக்கூடாது என்ற குறிக்கோள் உடன் அந்த பாம்புகளை காப்பாற்றும் பணியை செய்து வந்தார்.
இதுபோல் இதுவரை ஆயிரக்கணக்கில் பாம்புகளை உயிருடன் காப்பாற்றிய அவர் நேற்று ஒரு அலுவலகத்தில் புகுந்த பாம்பை பிடித்து விட்டு வீட்டிற்கு வந்தவர் மயங்கி விழுந்து உள்ளார், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இன்று நடைபெற்ற பிரேதபரிசோதனையில் அவர் முதுகு பகுதியில் பாம்பு கடித்த அடையாளம் இருந்ததால் அவர் பாம்பு கடித்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.



