மகள் திருமணத்துக்கு அழைத்த ரிக்சாக்காரருக்கு மோடி சொன்ன பதில்… இதுதான்!

letter to modi1 - 2026

என் மகளின் திருமணத்திற்கு வாருங்கள்… பிரதம மந்திரிக்கு அழைப்பு விடுத்த ரிக்ஷாக்காரர். மோடி என்ன சொன்னார் தெரியுமா?

அவர் ஒரு சாதாரண ரிக்ஷாக்காரர். தினமும் ரிக்ஷா சைக்கிள் மிதித்தால்தான் வயிறு நிறையும். தன் வாழ்நாள் முழுவதும் ரிக்ஷா மிதித்து வந்த பணத்தில் சிறிது சேமித்து தன் மகளுக்கு திருமணம் செய்கிறார். இந்த திருமணத்திற்கு தன் உறவினர்களோடு நண்பர்களையும் திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அவ்வாறு அழைப்பு அனுப்பியவர்களுள் ஒரு விவிஐபி கூட உள்ளார் . அந்த விவிஐபி யார்? அவர் ரிக்ஷாகாரரின் மகளின் திருமணத்திற்கு வந்தாரா?

உத்தரப் பிரதேசத்தில் ரிக்சாக்காரர் ஒருவர் தன் மகளுக்கு திருமணம் செய்கிறார். அவர் உறவினர் நண்பர்களோடு கூட அழைப்பு அனுப்பியவர்களுள் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி கூட உள்ளார். ஆமாம் இது உண்மை.

டூம்ரி கிராமத்தைச் சேர்ந்த மங்கள் கெவாத் பிரதமர் நரேந்திர மோடியை தன் மகள் திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். தன் மகளின் திருமணத்திற்கு வந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அந்தத் திருமணப் பத்திரிக்கையை தில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு அனுப்பினார். பிப்ரவரி 12ஆம் தேதி தன் மகளின் விவாகம் நடக்கப் போகிறது என்று கூறினார் . இந்த விஷயம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

letter to modi2 - 2026

சில நண்பர்கள் பிரதமர் மோடியை அழைக்கும்படி கூறியதால் தன்னுடைய ஆசைப்படியும் பிரதமரின் காரியாலயத்திற்கு திருமண பத்திரிக்கையை அனுப்பினார். ஒன்று தில்லி அலுவலகத்துக்கும் மற்றொன்று பிரதமர் தொகுதியான வாராணசி அலுவலகத்துக்கும் அனுப்பியதாகக் கூறினார்.

திருமண அழைப்பிதழைப் பார்த்த பிரதமர் மோடி ரிக்சாக்காரருக்கும் அவருடைய மகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கடிதம் எழுதினார். குடும்பத்திற்கும் அவருடைய மகளுக்கும் தன் ஆசிகளை தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதினார் . இந்தக் கடிதம் சரியாக பிப்ரவரி 12 ஆம் தேதி திருமண நாளன்றே வந்து சேர்ந்தது. கடிதத்தைப் பார்த்து ஆனந்தத்தில் குதித்தார் கெவாத்.

பிரதமர் மோடியிடம் இருந்து கடிதம் வரும் என்று தான் எப்போதும் எதிர்பார்க்க வில்லை என்றும் ஒரேயடியாக கடிதத்தைப் பார்த்ததும் தன் குடும்பத்தினர் மிகவும் ஆனந்தத்தில் திளைத்தோம் என்றும் கூறினார்.

பிரதமர் மோடியிடமிருந்து வந்த கடிதத்தை தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காண்பித்தார். இந்தக் கடிதத்தை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வேன் என்றார். அதோடு கெவாத் கங்கா மாதாவின் தீவிர பக்தர். ரிக்சா ஓட்டி அதன் மூலம் வரும் ஊதியத்தில் சிறு பகுதியை கங்கா மாதாவுக்கு பூஜை செய்வதற்கு செலவழிப்பார்.

ஸ்வச் பாரத் – தூய்மை இந்தியா திட்டத்தில் கூட மிகவும் ஆக்டிவாக பங்குபெற்றார் கெவாத். பிஜேபி அங்கத்தினராக பிரதமர் மோடி மூலம் பதிவு செய்துகொண்டார் மங்கள் கெவாத்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories