இந்து அறநிலையத் துறையில் பணியாற்றும் ஆணையர்கள் முதல் அனைத்தும் ஊழியர்களும் தான் இந்து என உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற விதியை 8 வாரத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இதற்கு இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், கோவில் அறங்காவலர் மற்றும் நிர்வாகிகள் இந்து என்று உறுதிமொழி எடுத்திருப்பதாகவும், இந்து அறநிலைய துறை நியமிக்கப்பட்ட ஆணையர் மற்றும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் என்பதால் இதுவரை இந்து என்று உறுதிமொழி எடுக்கவில்லை என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிகாரிகளும் இந்து என்று உறுதி மொழி எடுக்கும் விதி கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.