ரஜினி தொடங்கினாரோ இல்லையோ… குஷ்புவும் தமிழிசையும் ‘போரை’த் தொடங்கிவிட்டனர்!

Published:

kushboo tamilisai - 2026

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் தான் அறிவித்த போரினைத் தொடங்கும் முன்பே, அரசியல்வாதிகள் மத்தியில் போர் தொடங்கிவிட்டது. போர் வரும்போது பார்க்கலாம் என்று ரஜினி அறிவித்தாலும் அறிவித்தார்… அதற்குள் மற்றவர்கள் அவரை வைத்து போரை நடத்தி வருகின்றனர்.

ரஜினிகாந்த்தை பாஜக.,வில் இணைய அழைப்பு விடுப்பது, கெஞ்சுவது போல் உள்ளது என நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு டுவிட்டரில் கருத்து பதிவிட்டார்.

இதனால் ஆவேசமடைந்த தமிழிசை, நல்லவர்களை வரவேற்பது கெஞ்சுவது போன்றதல்ல. திமுகவில் இருந்து விரட்டப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தீர்கள். கட்சி விட்டு கட்சி தாவுவது குஷ்புக்கு வாடிக்கை என்றார் டுவிட்டரில்!

அதற்கு ரீடுவிட்டிய குஷ்பு, திமுகவில் இருந்து வெளியேறியதற்கான காரணம் தனக்கு மட்டுமே தெரியும். திமுகவில் இருந்து தான் வெளியேறி 6 மாதங்களுக்கு பிறகே காங்கிரஸில் இணைந்தேன். ஆனால் காங்கிரஸில் இருந்து வெளியேறுவோரை அன்றைய தினமே பாஜக தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்கிறது என்று குஷ்பு பதிலடி கொடுத்தார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இப்படியாக டுவிட்டர் யுத்த களத்தில் வார்த்தைப் போரை நடத்தி வருகிறார்கள் தமிழிசையும் குஷ்புவும்! இரண்டு தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இப்படி பேசிய கட்சிகளாக வார்த்தைப் போரை டுவிட்டரில் நிகழ்த்தி வருவதைக் கண்டு பலரும் ஆச்சரியப்பட்டனர். இந்நிலையில்,

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Related articles

Recent articles

spot_img