முன்னாள் எம்.பி., இரா.செழியன் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

era_sezhiyan

சென்னை:

மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.செழியன் உடல் நலக்குறைவால் வேலூரில் செய்வாய்க்கிழமை இன்று காலமானார். அவருக்கு வயது 95.

மூத்த அரசியல்வாதி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர் எனப் பன்முகங்களைக் கொண்டவர் இரா.செழியன். திருவாரூரில் பிறந்த வர். ஜனநாயக உரிமைகளைப் பேணிக் காத்தவர். ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். மறைந்த அமைச்சர் நெடுஞ்செழியனின் தம்பி. சிறுகதைகள், நாடகங்கள் பல எழுதியுள்ளார்.

மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கத்தில் சேர்ந்து, திமுக., தொடங்கப்பட்டபோது, அண்ணாதுரையுடன் நெருக்கமாகப் பழகினார். 1962, 1967 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். 1977ஆம் ஆண்டு தி.மு.க-விலிருந்து விலகி, ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். 1978ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

1988ஆம் ஆண்டு ஜனதா கட்சி உடைந்து, ஜனதா தளம் தோன்றியது. வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளத்தில் செழியன் முக்கியப் பொறுப்பு வகித்தார். ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் லோக் தளம் உருவான போது, செழியன் அதில் துணைத் தலைவர் ஆனார். பின்னர் 2001ஆம் ஆண்டு அரசியலிலிருந்து விலகினார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இரா. செழியனின் மறைவு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தன் இரங்கல் செய்தியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு. இரா.செழியன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்தேன். ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக பணி செய்தவரை தேசம் இழந்தது. அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா நற்கதியடைய அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன். என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மூத்தத் தலைவரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் காலமான செய்தி அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தை அளித்துள்ளது. எளிமையும், பண்பாடும் நிறைந்தவர். இந்திய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய பணி குறிப்பாக அவசர நிலை காலத்தில் அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் துணிகரமாக அவர் ஆற்றிய உரை என்றென்றும் நினைவுகூரப்படும். அவரின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது” என்று கூறியுள்ளார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

பாமக., நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல்:

இரா.செழியன் மறைவுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்,

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தலைசிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் வேலூரில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

திராவிய இயக்கத்தின் அறிவுச்சுரங்கங்களில் இரா. செழியன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். 4 முறை மக்களவை உறுப்பினராகவும், ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய செழியன் ஒவ்வொரு அவையிலும் தமது முத்திரையை பதித்தார். அண்ணாவின் அன்பைப் பெற்ற செழியன், திராவிட இயக்கத்தின் சீரழிவை உணர்ந்து கொண்டு 1977-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி ஜனதாக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். நான் போற்றும் தலைவரான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அன்புக்கு பாத்திரமான செழியன், 1988-ஆம் ஆண்டு வி.பி.சிங் அவர்கள் ஜனதா தளம் கட்சியை ஒருங்கிணைக்க உதவியாக இருந்தார். அரசியலில் தூய்மையை கடைபிடித்த செழியன், பொதுவாழ்வில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு, அதற்காக போராடினார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

செழியன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான Parliament for The People (மக்களுக்காக நாடாளுமன்றம்) என்ற நூல் நிகழ்கால நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் படித்து, பின்பற்ற வேண்டிய வழிகாட்டி ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
– என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories