அணுசக்தி விநியோக நாடுகள் குழுமத்தில் இந்தியா உறுப்பினராவதில் கடும் சிக்கல்: சீனா

indian-national-flag759
national flag floating on the eve of republic day in capital on Thursday,photo/RAVI BATRA 25 JAN 2007

பீஜிங்:

என்எஸ்ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில் இந்தியா உறுப்பினராகும் பிரச்னை, மேலும் சிக்கலாகி உள்ளது என்று சீனா கூறியுள்ளது. அமெரிக்கா, சீனா உட்பட 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள, என்எஸ்ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தின் உறுப்பினராக இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு, தென் கொரியாவின் சியோலில் நடந்த, என்எஸ்ஜி., கூட்டத்தில், இந்தியாவின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இதற்கு அண்டை நாடான சீனா தடையாக இருந்தது. சீனாவின் துாண்டுதலில் பாகிஸ்தானும் இதற்கு விண்ணப்பித்திருந்தது.

‘இந்தியா போன்ற அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை குழுமத்தில் சேர்க்கக் கூடாது’ என சீனா வலியுறுத்தியது. அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக முடிவு செய்தால்தான் உறுப்பினராக முடியும் என்ற நிலையில், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவு இருந்தபோதும், சீனாவின் எதிர்ப்பால் இந்த அமைப்பில் உறுப்பினராகும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

என்எஸ்ஜி.,யின் கூட்டம், இந்த மாதத்தில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னில் நடக்க உள்ளது. இம்முறையாவது இந்தியா உறுப்பினராக வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் லி ஹூய்லாய், என்எஸ்ஜி, உறுப்பினர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை உறுப்பினராக சேர்க்கக் கூடாது என்ற விதி உள்ளது. அதை மாற்றி அமைக்கலாம் என, என்எஸ்ஜி.,யில் உள்ள அனைத்து நாடுகளும் முடிவு செய்தால், அதை ஏற்கத் தயாராக உள்ளோம். ஆனால், தற்போதைய சூழ்நிலை, இந்தியாவுக்கு எதிராக சிக்கலாகவே உள்ளது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories