December 6, 2025, 12:20 PM
29 C
Chennai

செங்கோட்டை ராணுவ வீரர் சந்திரசேகர் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

செங்கோட்டையைச் சேர்ந்த வீரர் சந்திரசேகர் உடல் அரசு மரியாதையுடன்  நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் வீர மரணம் அடைந்த தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த வீரர் சந்திரசேகர் உடல் அரசு மரியாதையுடன் இன்று இரவு 8.30க்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

veeravanakkam - 2025

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் பயங்கர வாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், சிஆர்பிஎஃப் பிரிவைச் சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் தமிழகத்தின் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்திரசேகரும் வீரமரணம் அடைந்தார்.

chandrasekar1 - 2025

அவருடைய உடல் இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு கொண்டு வரப் பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அவரது சொந்த ஊருக்கு ராணுவத்தினரால் எடுத்து வரப்பட்டு, மாலை 7 மணிக்குப் பின்னர் முறைப்படி அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப் பட்டது. பின்னர் இரவு 8.30க்கு செங்கோட்டை இரட்டைக்குளம் பகுதியில் அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.

chandrasekar3 - 2025

அதற்கு முன்னதாக, தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ராஜலட்சுமி, தென்காசி மாவட்ட ஆட்சியர் சுந்தர் தயாளன், மாவட்ட எஸ்.பி., சுகுணா சிங் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் போலீஸார் பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.

chandrasekar4 - 2025

இதனிடையே வீர மரணம் அடைந்த தமிழக வீரர் சந்திரசேகரின் குடும்பத்தாருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் ராஜலட்சுமி, சந்திரசேகர் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த நிதியை வழங்கினார். நகரின் அதிமுக.,வினர் குட்டியப்பா (எ) கிருஷ்ண முரளி உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

வீர மரணமடைந்த சந்திரசேகர் உடல் திருவனந்தபுரத்தில் இருந்து கொண்டு வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் செங்கோட்டை முதல் இரட்டைக்குளம் வரை திரண்டு நின்று மலர் தூவி மரியாதை செய்தனர். கொரோனா நேரத்தில்
மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, சிறப்பாக செயல்பட்ட செங்கோட்டை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories