April 29, 2025, 12:02 AM
29.9 C
Chennai

செங்கோட்டை ராணுவ வீரர் சந்திரசேகர் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

செங்கோட்டையைச் சேர்ந்த வீரர் சந்திரசேகர் உடல் அரசு மரியாதையுடன்  நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் வீர மரணம் அடைந்த தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த வீரர் சந்திரசேகர் உடல் அரசு மரியாதையுடன் இன்று இரவு 8.30க்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் பயங்கர வாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், சிஆர்பிஎஃப் பிரிவைச் சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் தமிழகத்தின் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்திரசேகரும் வீரமரணம் அடைந்தார்.

அவருடைய உடல் இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு கொண்டு வரப் பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அவரது சொந்த ஊருக்கு ராணுவத்தினரால் எடுத்து வரப்பட்டு, மாலை 7 மணிக்குப் பின்னர் முறைப்படி அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப் பட்டது. பின்னர் இரவு 8.30க்கு செங்கோட்டை இரட்டைக்குளம் பகுதியில் அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.

ALSO READ:  சங்கரன்கோவில் பகுதி புத்த ஆலயம் நோக்கி புத்த பிக்குகள் ‘அமைதி’ நடைபயணம்!

அதற்கு முன்னதாக, தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ராஜலட்சுமி, தென்காசி மாவட்ட ஆட்சியர் சுந்தர் தயாளன், மாவட்ட எஸ்.பி., சுகுணா சிங் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் போலீஸார் பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.

இதனிடையே வீர மரணம் அடைந்த தமிழக வீரர் சந்திரசேகரின் குடும்பத்தாருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் ராஜலட்சுமி, சந்திரசேகர் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த நிதியை வழங்கினார். நகரின் அதிமுக.,வினர் குட்டியப்பா (எ) கிருஷ்ண முரளி உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

வீர மரணமடைந்த சந்திரசேகர் உடல் திருவனந்தபுரத்தில் இருந்து கொண்டு வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் செங்கோட்டை முதல் இரட்டைக்குளம் வரை திரண்டு நின்று மலர் தூவி மரியாதை செய்தனர். கொரோனா நேரத்தில்
மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, சிறப்பாக செயல்பட்ட செங்கோட்டை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

ALSO READ:  மதுரை மண்டலத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம்! இதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Entertainment News

Popular Categories