இன்று பாதிப்பு 639 பேருக்கு!சென்னையில் மட்டும் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு!

tamilnaducorona
tamilnaducorona

கொரோனா பாதிப்புகள் குறித்து இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

தமிழகத்தில் 11224 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. 39 அரசு மற்றும் 22 தனியார் ஆய்வகங்களில் கொரோனா தொற்று மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!

தற்போதும் 477 மாதிரிகள் சோதனைக் கட்டத்தில் இருப்பதாகவும் 15 ஆயிரத்து 99 மாதிரிகள் மறு ஆய்வுகளுக்கு உட்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 15 ஆயிரத்து 19 மாதிரிகள் சோதிக்கப்பட்டு உள்ளன.

தற்போது 6971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர். இன்று தமிழகத்தைச் சேர்ந்த 558 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த 73 பேர், கர்நாடகத்திலிருந்து வந்த 2 பேர், ராஜஸ்தானில் இருந்து வந்த 2 பேர், தெலங்கானாவில் இருந்து வந்த 3 பேர், ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் ஆகியோருக்கு கொரானா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து மொத்தமாக 639 பேருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது!

இதுவரை தமிழகத்தில் 11 ஆயிரத்து 224 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இன்று தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில் 398 பேர் ஆண்கள் 241 பேர் பெண்கள். இதுவரை 7 ஆயிரத்து 343 பேர் ஆண்கள், 3 ஆயிரத்து 878 பேர் பெண்கள். மூன்று பேர் திருநங்கையர்!

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இன்று 634 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 172 பேர் இவ்வாறு குணம் பெற்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

இன்று நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலையில் சென்னையில் அதிகபட்சமாக 480 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! இதை அடுத்து சென்னையில் நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,750 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் 18 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது!

சுகாதார துறை நேற்றைய அறிவிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருவர் குணமடைந்து விட்டதாக தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் 20 பேர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

coronamay17 - 2026
coronamay17a - 2026
ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories