April 26, 2025, 10:21 AM
33.1 C
Chennai

இன்று பாதிப்பு 639 பேருக்கு!சென்னையில் மட்டும் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு!

tamilnaducorona
tamilnaducorona

கொரோனா பாதிப்புகள் குறித்து இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

தமிழகத்தில் 11224 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. 39 அரசு மற்றும் 22 தனியார் ஆய்வகங்களில் கொரோனா தொற்று மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!

தற்போதும் 477 மாதிரிகள் சோதனைக் கட்டத்தில் இருப்பதாகவும் 15 ஆயிரத்து 99 மாதிரிகள் மறு ஆய்வுகளுக்கு உட்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 15 ஆயிரத்து 19 மாதிரிகள் சோதிக்கப்பட்டு உள்ளன.

தற்போது 6971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர். இன்று தமிழகத்தைச் சேர்ந்த 558 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த 73 பேர், கர்நாடகத்திலிருந்து வந்த 2 பேர், ராஜஸ்தானில் இருந்து வந்த 2 பேர், தெலங்கானாவில் இருந்து வந்த 3 பேர், ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் ஆகியோருக்கு கொரானா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து மொத்தமாக 639 பேருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது!

இதுவரை தமிழகத்தில் 11 ஆயிரத்து 224 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இன்று தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில் 398 பேர் ஆண்கள் 241 பேர் பெண்கள். இதுவரை 7 ஆயிரத்து 343 பேர் ஆண்கள், 3 ஆயிரத்து 878 பேர் பெண்கள். மூன்று பேர் திருநங்கையர்!

ALSO READ:  அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

இன்று 634 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 172 பேர் இவ்வாறு குணம் பெற்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

இன்று நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலையில் சென்னையில் அதிகபட்சமாக 480 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! இதை அடுத்து சென்னையில் நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,750 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் 18 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது!

சுகாதார துறை நேற்றைய அறிவிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருவர் குணமடைந்து விட்டதாக தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் 20 பேர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

ALSO READ:  வலுவான கூட்டணி அமைத்து திமுக.,வை வீழ்த்துவோம்: இராம. சீனிவாசன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Topics

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

Entertainment News

Popular Categories