இன்று பாதிப்பு 639 பேருக்கு!சென்னையில் மட்டும் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு!

tamilnaducorona
tamilnaducorona

கொரோனா பாதிப்புகள் குறித்து இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

தமிழகத்தில் 11224 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. 39 அரசு மற்றும் 22 தனியார் ஆய்வகங்களில் கொரோனா தொற்று மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!

தற்போதும் 477 மாதிரிகள் சோதனைக் கட்டத்தில் இருப்பதாகவும் 15 ஆயிரத்து 99 மாதிரிகள் மறு ஆய்வுகளுக்கு உட்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 15 ஆயிரத்து 19 மாதிரிகள் சோதிக்கப்பட்டு உள்ளன.

தற்போது 6971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர். இன்று தமிழகத்தைச் சேர்ந்த 558 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த 73 பேர், கர்நாடகத்திலிருந்து வந்த 2 பேர், ராஜஸ்தானில் இருந்து வந்த 2 பேர், தெலங்கானாவில் இருந்து வந்த 3 பேர், ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் ஆகியோருக்கு கொரானா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து மொத்தமாக 639 பேருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது!

இதுவரை தமிழகத்தில் 11 ஆயிரத்து 224 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இன்று தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில் 398 பேர் ஆண்கள் 241 பேர் பெண்கள். இதுவரை 7 ஆயிரத்து 343 பேர் ஆண்கள், 3 ஆயிரத்து 878 பேர் பெண்கள். மூன்று பேர் திருநங்கையர்!

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இன்று 634 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 172 பேர் இவ்வாறு குணம் பெற்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

இன்று நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலையில் சென்னையில் அதிகபட்சமாக 480 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! இதை அடுத்து சென்னையில் நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,750 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் 18 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது!

சுகாதார துறை நேற்றைய அறிவிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருவர் குணமடைந்து விட்டதாக தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் 20 பேர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

coronamay17 - 2026
coronamay17a - 2026
ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories