இன்று பாதிப்பு 639 பேருக்கு!சென்னையில் மட்டும் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு!

tamilnaducorona
tamilnaducorona

கொரோனா பாதிப்புகள் குறித்து இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

தமிழகத்தில் 11224 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. 39 அரசு மற்றும் 22 தனியார் ஆய்வகங்களில் கொரோனா தொற்று மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!

தற்போதும் 477 மாதிரிகள் சோதனைக் கட்டத்தில் இருப்பதாகவும் 15 ஆயிரத்து 99 மாதிரிகள் மறு ஆய்வுகளுக்கு உட்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 15 ஆயிரத்து 19 மாதிரிகள் சோதிக்கப்பட்டு உள்ளன.

தற்போது 6971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர். இன்று தமிழகத்தைச் சேர்ந்த 558 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த 73 பேர், கர்நாடகத்திலிருந்து வந்த 2 பேர், ராஜஸ்தானில் இருந்து வந்த 2 பேர், தெலங்கானாவில் இருந்து வந்த 3 பேர், ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் ஆகியோருக்கு கொரானா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து மொத்தமாக 639 பேருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது!

இதுவரை தமிழகத்தில் 11 ஆயிரத்து 224 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இன்று தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில் 398 பேர் ஆண்கள் 241 பேர் பெண்கள். இதுவரை 7 ஆயிரத்து 343 பேர் ஆண்கள், 3 ஆயிரத்து 878 பேர் பெண்கள். மூன்று பேர் திருநங்கையர்!

இன்று 634 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 172 பேர் இவ்வாறு குணம் பெற்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

இன்று நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலையில் சென்னையில் அதிகபட்சமாக 480 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! இதை அடுத்து சென்னையில் நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,750 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் 18 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது!

சுகாதார துறை நேற்றைய அறிவிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருவர் குணமடைந்து விட்டதாக தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் 20 பேர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

coronamay17 - 2026
coronamay17a - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories