December 5, 2025, 11:43 PM
26.6 C
Chennai

விலை உயர்வு; விற்பனை குறைவு! இளநீரின் நிலை இது!

coconut
coconut

வரத்து குறைவாலும் விலை உயர்வாலும், இளநீர் விற்பனை வெகுவாகக் குறைந்துவிட்டது. மதுரையில் விலை உயர்வால் இளநீர் வியாபாரம் குறைந்து விட்ட நிலையில், செலவு அதிகம் செய்து கொண்டு வந்ததால் தாங்கள் இழப்பை சந்தித்து வருவதாக வியாபாரிகள் கூறினர்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இளநீர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தேங்காய் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. தமிழகக்தில் பல மாவட்டங்களில் தோப்புகளில் இளநீர் கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கினாலும், அதை வெட்டி வியாபாரத்துக்கு அனுப்பி வைக்க, தேங்காய் வெட்டுத் தொழிலாளர்கள் குறைவு தான்.

மதுரை, திண்டுக்கல், தேனி, பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, அய்யம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தோப்புகளில் வெட்டப்படும் இளநீர் லாரிகள், மினி வேன்கள் மூலமாக மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, மதுரை கோரிப்பாளையம் வைகை ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ள மொத்த குடோன் மூலம் தான் மதுரை நகரில உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பல மாவட்டங்களில் தென்னந்தோப்புகளில் 40 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்படுகிறது. அத்துடன், இளநீரை சில தோப்புகளில்தான் வெட்ட அனுமதிக்கின்றனர். இவ்வாறு இளநீர் மரத்திலிருந்து வெட்டி இறக்க போதுமான தொழிலாளர்கள் இப்போது இல்லை. கொரோனா காலம் என்பதால் பலரும் தயக்கம் காட்டி வருவதாகவும், மேலும் வாகன வாடகை உயர்ந்திருப்பதாலும் தற்போது இளநீர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இது குறித்து மதுரை அண்ணாநகர் இளநீர் சில்லறை வியாபாரி சாமி கூறியபோது… கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல், மே மாதங்களில் இளநீர் விற்பனை நல்ல நிலையில் இருந்ததாகவும், இளநீர் ரூ. 30-க்கு விற்க நேர்ந்தது. தற்போது இளநீரை தோப்புகளில் வெட்டுவதற்கு போதிய தொழிலாளர்கள் பணிக்கு வராததாலும், வாகன வாடகை அதிகரித்ததாலும் இளநீர் விலை உயர்ந்து விட்டது. இதனால் இளநீர் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories