December 6, 2025, 1:06 PM
29 C
Chennai

பிழைப்புக்காக… வெளி மாவட்டங்களுக்கு புலம் பெயரும் கூலித் தொழிலாளர்கள்!

bus operation
bus operation

மதுரை : பிழைப்புக்காக மதுரை மாவட்டத் தொழிலாளர்கள் பலர் வெளி மாவட்டத்துக்கு புலம் பெயர தொடங்கியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், திருவேடகம், சமயநல்லூர், தேனூர், பரவை, கருப்பட்டி, இரும்பாடி, குருவித்துறை, மன்னாடிமங்கலம், முள்ளிப்பள்ளம், தென்கரை, ஆலங்கொட்டாரம், பேரையூர் ஆகிய பகுதிகளில் கொடிக்கால்களில் வெற்றிலை விவசாயமானது பல ஆயிரம் ஏக்கரில் நடைபெற்றது.

சோழவந்தானிலிருந்து ரயில் மூலம் மும்பை, தில்லி, பெங்களூர் வரை வெற்றிலைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட காலமும் உண்டு.
இதற்காக, தமிழக அரசு சோழவந்தான் நகரில் கூட்டுறவுத் துறையின் சார்பில் வெற்றிலை பயிரிடுவோர் வங்கியும் தொடங்கி வைக்கப்பட்டு, வெற்றிலை விவசாய வளர்ச்சிக்கு பலவிதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோழவந்தான் வட்டாரங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த வெற்றிலை பயிர்களில் இலை கருகல், முடிச்சு நோய் ஆகிய நோய்கள் தாக்கப்பட்டு, வெற்றிலை பயிர்கள் பலத்த சேதமடைந்தன.

இந்த பயிர் செய்ய விவசாயிகள் பலர், அரசு வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் பயிர் கடன் பெற்றிருந்தனர்.

வெற்றிலை பயிர்களில் நோய் தாக்குதலால் ஏற்பட்ட நஷ்டத்தால், பல விவசாயிகள் தாங்கள் வைத்திருந்த சொத்துக்களை விற்பனை செய்து வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினர்.

சிலர் கடனுக்கு பயந்து இரவோடு, இரவாக வேறு ஊர்களுக்கு சென்றவர்களும் உண்டு. இவ்வாறு விவசாயத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பலர் திருப்பூர், கோவையில் பின்னலாடை தொழிலுக்கும், இன்னும் சிலர் சிவகாசி, திருத்தங்கல்லுக்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளில் கூலி வேலைக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

கொரோனாவையொட்டி, கடந்த பல நாட்களாக சோழவந்தான், பேரையூர் பகுதிகளுக்கு சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள்.
கம்பெனிகள் திறந்தாலும், பஸ் போக்குவரத்து தொடங்கிய தாலும், மீண்டும் திருப்பூர், கோவை, சிவகாசி ஆகிய பகுதிகளுக்கு பிழைப்பை தேடி செல்ல முற்பட்டுள்ளனர்.

சோழவந்தானைச் சேர்ந்த குமரேசன் கூறியது: சோழவந்தான் பகுதியில் சுமார் இரண்டாயிரம் ஏக்கரில் வெற்றிலை விவசாயம் நடைபெற்றபோது, எங்களுக்கு வேலையும், நல்ல கூலியும் கிடைத்தது. நோய்தாக்கம் காரணமாக விவசாயம் சுருங்கியதால், வேலையின்றி, திருப்பூர் பனியன் கம்பெனியில் குடும்பத்துடன் சென்று தங்கி பணிபுரிகிறேன். விழா காலங்களுக்கு மட்டும் நான் ஊருக்கு வருவேன் என, கண்ணீர் மல்க கூறினார்.

செய்தி :ரவிச்சந்திரன் , மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories