மதுரை மகளிர் வட்டம் 8 வது குழு சார்பில் காவல் நிலையத்தில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா அமைத்துக் கொடுத்தனர்!
மதுரையில் தெற்கு வாசலில் அமைந்துள்ள கிரைம் பிரான்ச் குற்றப்பிரிவு மகளிர் காவல் நிலையத்தில் மதுரை லேடிஸ் சர்க்கிள் 8 சார்பாக சிறுவர்,சிறுமிகளுக்கான விளையாட்டு சாதனங்கள், புத்தகங்கள் மற்றும் பொம்மைகளை வழங்கி, காவல் நிலைய சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்தனர்.
இந்நிகழ்ச்சியை காவல் ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதம் அவர்கள் திறந்துவைத்தனர்.அவருடன் மதுரை லேடிஸ் சர்க்கிள் 8 ன் சேர்மன் சுகன்யா ரகுராம், விசாலாட்சி, மீனா,சீத்தல் மற்றும் கார்த்திக் உதவி ஆணையாளர் (சட்டம் ஒழுங்கு), ஜானகிராம்- ADSP, ஆய்வாளர் அனுஷியா ,மதுரை மகளிர் குற்றப்பிரிவு காவல் நிலையம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆனமலைஸ் டொயோட்டோ றிறுவனம் சார்பாக சண்முகம் மற்றும் ARC குழுமத்தினர் இந்நிகழ்ச்சிக்கான விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- ரவிச்சந்திரன், மதுரை