ஆம்புலன்ஸை வழி மறித்த யானை! பரபரப்பு!

elephant

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

தாளவாடி அருகே உள்ள ஆசனூர் வனப்பகுதி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது. ஆசனூர் வனப்பகுதில் பெங்களூரு – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை, ஒற்றைக் காட்டு யானை வழிமறித்தது. சிறிது நேரம் அங்கேயே நின்ற யானை, சாலையை விட்டு நகர மறுத்தது. பின்னர், வனப்பகுதியில் நுழைந்தது.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே போல, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள விவசாய தோட்டங்களில், கடந்த ஒரு மாதமாகவே யானைகள் நுழைந்து விளை நிளங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவும், ஊமப்பாளையம் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் நுழைந்தன. அவை, தங்கவேல் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்து 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின.

இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த, நேந்திரன், கதிலி உள்ளிட்ட வாழை மரங்களை யானைகள் சாய்த்ததால், இழப்பு ஏற்பட்டுள்ளது.

யானைகளால் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், தோட்டங்களுக்குள் வன விலங்குகள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories