December 6, 2025, 2:24 AM
26 C
Chennai

ஆம்புலன்ஸை வழி மறித்த யானை! பரபரப்பு!

elephant

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

தாளவாடி அருகே உள்ள ஆசனூர் வனப்பகுதி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது. ஆசனூர் வனப்பகுதில் பெங்களூரு – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை, ஒற்றைக் காட்டு யானை வழிமறித்தது. சிறிது நேரம் அங்கேயே நின்ற யானை, சாலையை விட்டு நகர மறுத்தது. பின்னர், வனப்பகுதியில் நுழைந்தது.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே போல, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள விவசாய தோட்டங்களில், கடந்த ஒரு மாதமாகவே யானைகள் நுழைந்து விளை நிளங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவும், ஊமப்பாளையம் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் நுழைந்தன. அவை, தங்கவேல் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்து 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின.

இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த, நேந்திரன், கதிலி உள்ளிட்ட வாழை மரங்களை யானைகள் சாய்த்ததால், இழப்பு ஏற்பட்டுள்ளது.

யானைகளால் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், தோட்டங்களுக்குள் வன விலங்குகள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories