கொரோனா பரவல் வேகம் அதிகம்! மதுரையில் நாளை முதல் முழு ஊரடங்கு!

autos in madurai
autos in madurai

கொரோனா வைரஸ் பரவல் வேகம் மிக அதிகமாக உள்ள நிலையில், மதுரையில் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி நாளை நள்ளிரவு முதல் 30ஆம் தேதி இரவு வரை மதுரையில் முழுஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

மதுரையில்  நாளை நள்ளிரவு முதல் வரும் 30ஆம் தேதி நள்ளிரவு வரை, 7 நாட்களுக்கு முழுஊரடங்கு பிறப்பிக்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் 7 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 

இந்த முழுஊரடங்கு காலத்தில், ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும், அத்தியாவசிய கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவோர், 1 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றும், வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும் முழு ஊரடங்கு காலகட்டத்தில் தேநீர் கடைகளுக்கும்கூட அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதி இல்லை என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், தற்போது உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப் படுவதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முன்னதாக, மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவர்கள், சமூக பரவலை கடைபிடிக்காத வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை கண்காணிக்க அரசு அதிகாரிகள், போலீஸ் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மதுரை பஸ் நிலையங்களில் முகக் கவசம் அணியாமல் ஹாயாக  வலம்  வந்த பலரும் மாட்டிக் கொண்டு அபராதம் ரூ. 200 கட்டினர்..சிலர் அதிகாரிகளிடம் எக்ஸ்கியூஸ் கேட்டனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் மசியவில்லை. ஆனால், மதுரை புறநகர் பகுதிகளில் பலர் முகக் கவசம் அணியாமலே வலம் வருகின்றனர்.

  • செய்தி :ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories