இந்தியப் படைகள் மீது சிறிய அளவிலான தாக்குதலுக்கு சீன ராணுவம் முடிவு

சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியிலிருந்து படைகள் வெளியேறாவிட்டால்,
இந்தியாவுக்கு எதிராக மிகச்சிறிய அளவிலான யுத்தத்தை நடத்துவோம் என சீனா
எச்சரித்துள்ளது.

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான
டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள்
தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு
அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

கடந்த ஜூன் மாதம் மத்தியில் எழுந்த பதற்றத்தை தொடர்ந்தும், சீனாவின் எல்லை
ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில், சீனாவின் பல்வேறு மிரட்டல்களை தாண்டி
இந்தியா, தனது துருப்புகளை அங்கு குவித்திருக்கிறது.

இந்த நிலையில், டோக்லாமில் உள்ள இந்திய ராணுவ துருப்புகளை அகற்றுவதில் குறியாக
உள்ள சீனா, சிறிய அளவிலான போர் முன்னெடுக்க ஆயத்தமாகி வருவதாக தகவல்
வெளியாகியிருக்கிறது.

சீனாவின் அதிகாரபூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ்-ல், பெய்ஜிங் சர்வதேச உறவுகள்
கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஹூ ஜி-யோங்(Hu Zhiyong) எழுதியிருக்கும்
கட்டுரையில், இந்திய ராணுவத்தை டோக்லாமில் இருந்து அகற்ற, இரண்டு
வாரங்களுக்குள் அங்கு சிறிய அளவிலான போர் முன்னெடுக்கப்படும் என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இந்தியாவிற்கு எதிராக சிறிய அளவிலான யுத்தத்தை முன்னெடுக்கும் முன்பாக, இந்திய
வெளியுறவுத்துறையிடம், சீன தரப்பில் இருந்து கண்டிப்பாக தகவல்
தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அண்மை காலமாக, சீனாவுடன்
மோசமான வெளியுறவு கொள்கையை இந்தியா கடைபிடித்து வருவதாகவும், இதனால், எல்லை
பிரச்சினை தீர்க்கப்படாமல் வளர்ந்து கொண்டே போவதாகவும், சீன அரசாங்கத்தின்
அதிகாரபூர்வ நாளேடான குளோபல் டைம்சில் வெளியாகியிருக்கும் கட்டுரையில்
குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூம்,
அனைத்து கட்சிகளும், டோக்லாம் விவகாரத்தை அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே பேசித்
தீர்க்க முடியும் என்று கூறி வரும் நிலையில், அதற்கு நேர் எதிரான
நிலைப்பாட்டிற்கு சீனா தயாராகி வருகிறது.

இந்தியாவை மீண்டும், மீண்டும் சீண்டிப்பார்க்கும் விதமாக கருத்துத் தெரிவித்து
வந்த சீனா, தற்போது, ஒருபடி மேலேபோய், இந்தியாவிற்கு எதிராக சிறிய அளவிலான
யுத்தத்தை முன்னெடுக்கப்போவதாக வெளியாகியிருக்கும் செய்தியால், ஏற்கனவே
பதற்றத்தால் சூழப்பட்டிருக்கும் டோக்லாம் பீடபூமியில், மேலும் பதற்றம்
அதிகரித்திருக்கிறது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories