இந்தியப் படைகள் மீது சிறிய அளவிலான தாக்குதலுக்கு சீன ராணுவம் முடிவு

சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியிலிருந்து படைகள் வெளியேறாவிட்டால்,
இந்தியாவுக்கு எதிராக மிகச்சிறிய அளவிலான யுத்தத்தை நடத்துவோம் என சீனா
எச்சரித்துள்ளது.

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான
டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள்
தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு
அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

கடந்த ஜூன் மாதம் மத்தியில் எழுந்த பதற்றத்தை தொடர்ந்தும், சீனாவின் எல்லை
ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில், சீனாவின் பல்வேறு மிரட்டல்களை தாண்டி
இந்தியா, தனது துருப்புகளை அங்கு குவித்திருக்கிறது.

இந்த நிலையில், டோக்லாமில் உள்ள இந்திய ராணுவ துருப்புகளை அகற்றுவதில் குறியாக
உள்ள சீனா, சிறிய அளவிலான போர் முன்னெடுக்க ஆயத்தமாகி வருவதாக தகவல்
வெளியாகியிருக்கிறது.

சீனாவின் அதிகாரபூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ்-ல், பெய்ஜிங் சர்வதேச உறவுகள்
கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஹூ ஜி-யோங்(Hu Zhiyong) எழுதியிருக்கும்
கட்டுரையில், இந்திய ராணுவத்தை டோக்லாமில் இருந்து அகற்ற, இரண்டு
வாரங்களுக்குள் அங்கு சிறிய அளவிலான போர் முன்னெடுக்கப்படும் என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவிற்கு எதிராக சிறிய அளவிலான யுத்தத்தை முன்னெடுக்கும் முன்பாக, இந்திய
வெளியுறவுத்துறையிடம், சீன தரப்பில் இருந்து கண்டிப்பாக தகவல்
தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அண்மை காலமாக, சீனாவுடன்
மோசமான வெளியுறவு கொள்கையை இந்தியா கடைபிடித்து வருவதாகவும், இதனால், எல்லை
பிரச்சினை தீர்க்கப்படாமல் வளர்ந்து கொண்டே போவதாகவும், சீன அரசாங்கத்தின்
அதிகாரபூர்வ நாளேடான குளோபல் டைம்சில் வெளியாகியிருக்கும் கட்டுரையில்
குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூம்,
அனைத்து கட்சிகளும், டோக்லாம் விவகாரத்தை அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே பேசித்
தீர்க்க முடியும் என்று கூறி வரும் நிலையில், அதற்கு நேர் எதிரான
நிலைப்பாட்டிற்கு சீனா தயாராகி வருகிறது.

இந்தியாவை மீண்டும், மீண்டும் சீண்டிப்பார்க்கும் விதமாக கருத்துத் தெரிவித்து
வந்த சீனா, தற்போது, ஒருபடி மேலேபோய், இந்தியாவிற்கு எதிராக சிறிய அளவிலான
யுத்தத்தை முன்னெடுக்கப்போவதாக வெளியாகியிருக்கும் செய்தியால், ஏற்கனவே
பதற்றத்தால் சூழப்பட்டிருக்கும் டோக்லாம் பீடபூமியில், மேலும் பதற்றம்
அதிகரித்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories