இந்தியப் படைகள் மீது சிறிய அளவிலான தாக்குதலுக்கு சீன ராணுவம் முடிவு

சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியிலிருந்து படைகள் வெளியேறாவிட்டால்,
இந்தியாவுக்கு எதிராக மிகச்சிறிய அளவிலான யுத்தத்தை நடத்துவோம் என சீனா
எச்சரித்துள்ளது.

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான
டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள்
தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு
அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

கடந்த ஜூன் மாதம் மத்தியில் எழுந்த பதற்றத்தை தொடர்ந்தும், சீனாவின் எல்லை
ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில், சீனாவின் பல்வேறு மிரட்டல்களை தாண்டி
இந்தியா, தனது துருப்புகளை அங்கு குவித்திருக்கிறது.

இந்த நிலையில், டோக்லாமில் உள்ள இந்திய ராணுவ துருப்புகளை அகற்றுவதில் குறியாக
உள்ள சீனா, சிறிய அளவிலான போர் முன்னெடுக்க ஆயத்தமாகி வருவதாக தகவல்
வெளியாகியிருக்கிறது.

சீனாவின் அதிகாரபூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ்-ல், பெய்ஜிங் சர்வதேச உறவுகள்
கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஹூ ஜி-யோங்(Hu Zhiyong) எழுதியிருக்கும்
கட்டுரையில், இந்திய ராணுவத்தை டோக்லாமில் இருந்து அகற்ற, இரண்டு
வாரங்களுக்குள் அங்கு சிறிய அளவிலான போர் முன்னெடுக்கப்படும் என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

இந்தியாவிற்கு எதிராக சிறிய அளவிலான யுத்தத்தை முன்னெடுக்கும் முன்பாக, இந்திய
வெளியுறவுத்துறையிடம், சீன தரப்பில் இருந்து கண்டிப்பாக தகவல்
தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அண்மை காலமாக, சீனாவுடன்
மோசமான வெளியுறவு கொள்கையை இந்தியா கடைபிடித்து வருவதாகவும், இதனால், எல்லை
பிரச்சினை தீர்க்கப்படாமல் வளர்ந்து கொண்டே போவதாகவும், சீன அரசாங்கத்தின்
அதிகாரபூர்வ நாளேடான குளோபல் டைம்சில் வெளியாகியிருக்கும் கட்டுரையில்
குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூம்,
அனைத்து கட்சிகளும், டோக்லாம் விவகாரத்தை அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே பேசித்
தீர்க்க முடியும் என்று கூறி வரும் நிலையில், அதற்கு நேர் எதிரான
நிலைப்பாட்டிற்கு சீனா தயாராகி வருகிறது.

இந்தியாவை மீண்டும், மீண்டும் சீண்டிப்பார்க்கும் விதமாக கருத்துத் தெரிவித்து
வந்த சீனா, தற்போது, ஒருபடி மேலேபோய், இந்தியாவிற்கு எதிராக சிறிய அளவிலான
யுத்தத்தை முன்னெடுக்கப்போவதாக வெளியாகியிருக்கும் செய்தியால், ஏற்கனவே
பதற்றத்தால் சூழப்பட்டிருக்கும் டோக்லாம் பீடபூமியில், மேலும் பதற்றம்
அதிகரித்திருக்கிறது.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories