ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கி அதிகாரத்தை நிலைநிறுத்த முயலும் அவலம்!

IMG 20170821 WA0041 e1503495730611 - 2026

சென்னை:
அதிமுக.,வின் பிளவு பட்ட இரு அணிகள் ஒன்றிணைந்தன என்று கூறப்பட நிலையில், இன்றும் இரண்டாகப் பிளவுபட்ட நிலையில்தான் திகழ்கிறது அதிமுக! தினகரன் அணி என தனியாக 19 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டுவதால், ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கிக் கொண்டிருப்பதால், இப்போது எது உண்மையான அதிமுக என்பதில் குழப்பம் நீட்டித்து வருகிறது.

டிடிவி தினகரன் இன்று கட்சியில் இருந்தும், கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் அமைச்சர்கள் சிலரை நீக்கி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், ஜெயலலிதாவால் அதிமுகவில் சேர்க்கப்பட்ட தங்களை நீக்க, தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக அமைச்சர்கள் எதிர்வாதம் செய்திருக்கின்றனர்.

மேலும், தினகரனை நாங்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து வெளியேற்றி விட்டோம் என்பதால், அவர் வெளியிடும் அறிவிப்புகளுக்கு எந்த பலனும் கிடையாது என்று அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

இதனிடையே, தினகரன் அணியினர் சபாநாயகர் தனபாலை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தவே சபாநாயகரை முதல்வர் ஆக்க வேண்டும் என்று சொல்கின்றனர் என அதிமுகவினர் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பாக வைத்தியலிங்கம் கூறியபோது, சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழுவைக் கூட்டி நடவடிக்கை எடுப்போம், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் சசிகலா குடும்பத்தினர்தான், எனவே அவர்களை கட்சியில் நீட்டிக்க வைப்பது சரியில்லை. நாங்கள் எம்,.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுக.,வில் இருப்பவர்கள், எங்களை நீக்க அவர்களுக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று, சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறிய வைத்தியலிங்கத்தை கட்சியை விட்டு நீக்கியதாக தினகரன் கூறியிருந்தார். இதை அடுத்து தஞ்சாவூரில் வைத்தியலிங்கத்துக்கும் சசிகலா அணியினருக்கும் இடையே இன்று அடிதடி ஏற்பட்டது. இரு தரப்பும் மற்றவர் உருவ பொம்மைகளைக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இன்று தினகரன் சார்பில் சசிகலாவின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அறிவிப்பில், பலரை கட்சியை விட்டுநீக்கியுள்ளார் தினகரன்.

அந்த அறிவிப்பு!

கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விடுவிப்பு!

கரூர் மாவட்ட செயலாளராக செந்தில் பாலாஜி நியமனம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக ஏழுமலை எம்எல்ஏ நியமனம்-

திருவாரூர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் காமராஜ் நீக்கம்; புதிய செயலாளராக எஸ். காமராஜ் நியமனம்!

தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக எம்எல்ஏ செந்தமிழன் நியமனம்!

வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் கே.சி.வீரமணி விடுவிப்பு; புதிய செயலாளராக எம்எல்ஏ பாலசுப்பிரமணி நியமனம்!

புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வைரமுத்து விடுவிப்பு; புதிய செயலாளராக பரணி கார்த்திகேயன் நியமனம்…

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளராக எம்எல்ஏ கோதண்டபாணி நியமனம்!

அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் விடுவிப்பு; திருவான்மியூர் முருகன், குடவாசல் ராஜேந்திரன் மற்றும் கல்லூர் வேலாயுதம் ஆகியோர் நியமனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories