ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கி அதிகாரத்தை நிலைநிறுத்த முயலும் அவலம்!

IMG 20170821 WA0041 e1503495730611 - 2026

சென்னை:
அதிமுக.,வின் பிளவு பட்ட இரு அணிகள் ஒன்றிணைந்தன என்று கூறப்பட நிலையில், இன்றும் இரண்டாகப் பிளவுபட்ட நிலையில்தான் திகழ்கிறது அதிமுக! தினகரன் அணி என தனியாக 19 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டுவதால், ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கிக் கொண்டிருப்பதால், இப்போது எது உண்மையான அதிமுக என்பதில் குழப்பம் நீட்டித்து வருகிறது.

டிடிவி தினகரன் இன்று கட்சியில் இருந்தும், கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் அமைச்சர்கள் சிலரை நீக்கி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், ஜெயலலிதாவால் அதிமுகவில் சேர்க்கப்பட்ட தங்களை நீக்க, தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக அமைச்சர்கள் எதிர்வாதம் செய்திருக்கின்றனர்.

மேலும், தினகரனை நாங்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து வெளியேற்றி விட்டோம் என்பதால், அவர் வெளியிடும் அறிவிப்புகளுக்கு எந்த பலனும் கிடையாது என்று அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

இதனிடையே, தினகரன் அணியினர் சபாநாயகர் தனபாலை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தவே சபாநாயகரை முதல்வர் ஆக்க வேண்டும் என்று சொல்கின்றனர் என அதிமுகவினர் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பாக வைத்தியலிங்கம் கூறியபோது, சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழுவைக் கூட்டி நடவடிக்கை எடுப்போம், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் சசிகலா குடும்பத்தினர்தான், எனவே அவர்களை கட்சியில் நீட்டிக்க வைப்பது சரியில்லை. நாங்கள் எம்,.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுக.,வில் இருப்பவர்கள், எங்களை நீக்க அவர்களுக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று, சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறிய வைத்தியலிங்கத்தை கட்சியை விட்டு நீக்கியதாக தினகரன் கூறியிருந்தார். இதை அடுத்து தஞ்சாவூரில் வைத்தியலிங்கத்துக்கும் சசிகலா அணியினருக்கும் இடையே இன்று அடிதடி ஏற்பட்டது. இரு தரப்பும் மற்றவர் உருவ பொம்மைகளைக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இன்று தினகரன் சார்பில் சசிகலாவின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அறிவிப்பில், பலரை கட்சியை விட்டுநீக்கியுள்ளார் தினகரன்.

அந்த அறிவிப்பு!

கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விடுவிப்பு!

கரூர் மாவட்ட செயலாளராக செந்தில் பாலாஜி நியமனம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக ஏழுமலை எம்எல்ஏ நியமனம்-

திருவாரூர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் காமராஜ் நீக்கம்; புதிய செயலாளராக எஸ். காமராஜ் நியமனம்!

தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக எம்எல்ஏ செந்தமிழன் நியமனம்!

வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் கே.சி.வீரமணி விடுவிப்பு; புதிய செயலாளராக எம்எல்ஏ பாலசுப்பிரமணி நியமனம்!

புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வைரமுத்து விடுவிப்பு; புதிய செயலாளராக பரணி கார்த்திகேயன் நியமனம்…

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளராக எம்எல்ஏ கோதண்டபாணி நியமனம்!

அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் விடுவிப்பு; திருவான்மியூர் முருகன், குடவாசல் ராஜேந்திரன் மற்றும் கல்லூர் வேலாயுதம் ஆகியோர் நியமனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories