ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கி அதிகாரத்தை நிலைநிறுத்த முயலும் அவலம்!

IMG 20170821 WA0041 e1503495730611 - 2026

சென்னை:
அதிமுக.,வின் பிளவு பட்ட இரு அணிகள் ஒன்றிணைந்தன என்று கூறப்பட நிலையில், இன்றும் இரண்டாகப் பிளவுபட்ட நிலையில்தான் திகழ்கிறது அதிமுக! தினகரன் அணி என தனியாக 19 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டுவதால், ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கிக் கொண்டிருப்பதால், இப்போது எது உண்மையான அதிமுக என்பதில் குழப்பம் நீட்டித்து வருகிறது.

டிடிவி தினகரன் இன்று கட்சியில் இருந்தும், கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் அமைச்சர்கள் சிலரை நீக்கி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், ஜெயலலிதாவால் அதிமுகவில் சேர்க்கப்பட்ட தங்களை நீக்க, தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக அமைச்சர்கள் எதிர்வாதம் செய்திருக்கின்றனர்.

மேலும், தினகரனை நாங்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து வெளியேற்றி விட்டோம் என்பதால், அவர் வெளியிடும் அறிவிப்புகளுக்கு எந்த பலனும் கிடையாது என்று அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

இதனிடையே, தினகரன் அணியினர் சபாநாயகர் தனபாலை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தவே சபாநாயகரை முதல்வர் ஆக்க வேண்டும் என்று சொல்கின்றனர் என அதிமுகவினர் தெரிவித்தனர்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

மேலும், இது தொடர்பாக வைத்தியலிங்கம் கூறியபோது, சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழுவைக் கூட்டி நடவடிக்கை எடுப்போம், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் சசிகலா குடும்பத்தினர்தான், எனவே அவர்களை கட்சியில் நீட்டிக்க வைப்பது சரியில்லை. நாங்கள் எம்,.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுக.,வில் இருப்பவர்கள், எங்களை நீக்க அவர்களுக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று, சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறிய வைத்தியலிங்கத்தை கட்சியை விட்டு நீக்கியதாக தினகரன் கூறியிருந்தார். இதை அடுத்து தஞ்சாவூரில் வைத்தியலிங்கத்துக்கும் சசிகலா அணியினருக்கும் இடையே இன்று அடிதடி ஏற்பட்டது. இரு தரப்பும் மற்றவர் உருவ பொம்மைகளைக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இன்று தினகரன் சார்பில் சசிகலாவின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அறிவிப்பில், பலரை கட்சியை விட்டுநீக்கியுள்ளார் தினகரன்.

அந்த அறிவிப்பு!

கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விடுவிப்பு!

கரூர் மாவட்ட செயலாளராக செந்தில் பாலாஜி நியமனம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக ஏழுமலை எம்எல்ஏ நியமனம்-

ALSO READ:  கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

திருவாரூர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் காமராஜ் நீக்கம்; புதிய செயலாளராக எஸ். காமராஜ் நியமனம்!

தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக எம்எல்ஏ செந்தமிழன் நியமனம்!

வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் கே.சி.வீரமணி விடுவிப்பு; புதிய செயலாளராக எம்எல்ஏ பாலசுப்பிரமணி நியமனம்!

புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வைரமுத்து விடுவிப்பு; புதிய செயலாளராக பரணி கார்த்திகேயன் நியமனம்…

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளராக எம்எல்ஏ கோதண்டபாணி நியமனம்!

அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் விடுவிப்பு; திருவான்மியூர் முருகன், குடவாசல் ராஜேந்திரன் மற்றும் கல்லூர் வேலாயுதம் ஆகியோர் நியமனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories