9 ஆண்டு சிறை வாசத்துக்குப் பின் வெளியில் வந்தார் லெட். கர்னல் புரோஹித்!

purohit - 2026

மும்பை:

சுமார் 9 ஆண்டு சிறை வாசத்துக்குப் பின்னர் லெப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் புதன்கிழமை இன்று நவி மும்பைக்கு அருகில் உள்ள டலோஜா சிறையில் இருந்து வெளிவந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த புரோஹித், உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்ததை அடுத்து இன்று வெளியில் வந்தார்.

இன்று முற்பகல் 10.45 மணி அளவில் சிறையில் இருந்து வெளியில் வந்த புரோஹித், காரில் அழைத்துச் செல்லப்பட்டார். ராணுவ போலீஸார் மற்றும் ராணுவ பாதுகாப்புப் படையின் உடனடி செயலாற்றும் குழுவினர் புரோஹித்தை தெற்கு மும்பையில் உள்ள கலோபா ராணுவ நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

2008 செப்.29ல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட புரோஹித் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

 

முன்னதாக நேற்று புரோஹித் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நான் எனது ராணுவ சீருடையை மீண்டும் அணிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது எனது உடலின் உள் தோலைப் போன்றது. உலகத்திலேயே மிகச்சிறந்த அமைப்பான இந்திய ராணுவத்தின் சேவைக்கு மீண்டும் நான் செல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டார் புரோஹித்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

எனக்கு இரண்டு குடும்பங்கள். ஒன்று ராணுவம், அடுத்தது என் தாய், மனைவி, இரு மகன்கள், ஒரு சகோதரி அடங்கிய குடும்பம். நான் அவர்களுடன் திரும்பிச் செல்ல இனியும் காத்திருக்க முடியாது என்று கூறிய புரோஹித், ராணுவம் என்னைக் கீழே தள்ளிவிடாது என்றும் உறுதிபடக் கூறினார்.

புரோஹித் மீது பயங்கரவாத எதிர்ப்புப் படை ஏடிஎஸ், மற்றும் தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ., இரண்டும் வெவ்வேறு விதமான முரண்பட்ட தகவல்களைப் பதிவு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories