February 21, 2026, 6:15 PM
29 C
Chennai

9 ஆண்டு சிறை வாசத்துக்குப் பின் வெளியில் வந்தார் லெட். கர்னல் புரோஹித்!

purohit - 2026

மும்பை:

சுமார் 9 ஆண்டு சிறை வாசத்துக்குப் பின்னர் லெப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் புதன்கிழமை இன்று நவி மும்பைக்கு அருகில் உள்ள டலோஜா சிறையில் இருந்து வெளிவந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த புரோஹித், உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்ததை அடுத்து இன்று வெளியில் வந்தார்.

இன்று முற்பகல் 10.45 மணி அளவில் சிறையில் இருந்து வெளியில் வந்த புரோஹித், காரில் அழைத்துச் செல்லப்பட்டார். ராணுவ போலீஸார் மற்றும் ராணுவ பாதுகாப்புப் படையின் உடனடி செயலாற்றும் குழுவினர் புரோஹித்தை தெற்கு மும்பையில் உள்ள கலோபா ராணுவ நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

2008 செப்.29ல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட புரோஹித் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

 

முன்னதாக நேற்று புரோஹித் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நான் எனது ராணுவ சீருடையை மீண்டும் அணிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது எனது உடலின் உள் தோலைப் போன்றது. உலகத்திலேயே மிகச்சிறந்த அமைப்பான இந்திய ராணுவத்தின் சேவைக்கு மீண்டும் நான் செல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டார் புரோஹித்.

எனக்கு இரண்டு குடும்பங்கள். ஒன்று ராணுவம், அடுத்தது என் தாய், மனைவி, இரு மகன்கள், ஒரு சகோதரி அடங்கிய குடும்பம். நான் அவர்களுடன் திரும்பிச் செல்ல இனியும் காத்திருக்க முடியாது என்று கூறிய புரோஹித், ராணுவம் என்னைக் கீழே தள்ளிவிடாது என்றும் உறுதிபடக் கூறினார்.

புரோஹித் மீது பயங்கரவாத எதிர்ப்புப் படை ஏடிஎஸ், மற்றும் தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ., இரண்டும் வெவ்வேறு விதமான முரண்பட்ட தகவல்களைப் பதிவு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories