9 ஆண்டு சிறை வாசத்துக்குப் பின் வெளியில் வந்தார் லெட். கர்னல் புரோஹித்!

purohit - 2026

மும்பை:

சுமார் 9 ஆண்டு சிறை வாசத்துக்குப் பின்னர் லெப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் புதன்கிழமை இன்று நவி மும்பைக்கு அருகில் உள்ள டலோஜா சிறையில் இருந்து வெளிவந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த புரோஹித், உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்ததை அடுத்து இன்று வெளியில் வந்தார்.

இன்று முற்பகல் 10.45 மணி அளவில் சிறையில் இருந்து வெளியில் வந்த புரோஹித், காரில் அழைத்துச் செல்லப்பட்டார். ராணுவ போலீஸார் மற்றும் ராணுவ பாதுகாப்புப் படையின் உடனடி செயலாற்றும் குழுவினர் புரோஹித்தை தெற்கு மும்பையில் உள்ள கலோபா ராணுவ நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

2008 செப்.29ல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட புரோஹித் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

 

முன்னதாக நேற்று புரோஹித் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நான் எனது ராணுவ சீருடையை மீண்டும் அணிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது எனது உடலின் உள் தோலைப் போன்றது. உலகத்திலேயே மிகச்சிறந்த அமைப்பான இந்திய ராணுவத்தின் சேவைக்கு மீண்டும் நான் செல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டார் புரோஹித்.

எனக்கு இரண்டு குடும்பங்கள். ஒன்று ராணுவம், அடுத்தது என் தாய், மனைவி, இரு மகன்கள், ஒரு சகோதரி அடங்கிய குடும்பம். நான் அவர்களுடன் திரும்பிச் செல்ல இனியும் காத்திருக்க முடியாது என்று கூறிய புரோஹித், ராணுவம் என்னைக் கீழே தள்ளிவிடாது என்றும் உறுதிபடக் கூறினார்.

புரோஹித் மீது பயங்கரவாத எதிர்ப்புப் படை ஏடிஎஸ், மற்றும் தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ., இரண்டும் வெவ்வேறு விதமான முரண்பட்ட தகவல்களைப் பதிவு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories