சென்னை; ரயில் நிலைய நடைமேடைக் கட்டணம் பத்து ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ரயில் நிலையங்களுக்கு பொதுமக்கள் தங்களது உறவினர்களையும், நண்பர்களையும் வரவேற்கவும், வழியனுப்பவும் மட்டுமே குடும்பத்தோடு நடைமேடைச் சீட்டு வாங்குகின்றனர். ரயில்சேவையை அவர்கள் நேரடியாக பயன்படுத்தவில்லை. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை ரயில் பயணம் செய்வதற்கு ஏறத்தாழ ரூ.15 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ரூ.10 கட்டணத்தில் தாம்பரம் வரை பயணம் செய்ய வழி உள்ளது. இவ்வாறு பயணக் கட்டணங்களே குறைவாக இருக்கும்போது, நடைமேடைக் கட்டணத்தை திடீரென உயர்த்தியிருப்பதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
ரயில் நிலைய நடைமேடைக் கட்டண உயர்வை திரும்பப் பெற சரத்குமார் வலியுறுத்தல்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

