December 6, 2025, 4:35 PM
29.4 C
Chennai

குரானை கொண்டு சென்றதாகக் கூறி… தங்கக் கடத்தலில் அமைச்சர் உடந்தையா?

kerala-minister-k-t-jaleel
kerala-minister-k-t-jaleel

தேச துரோக செயலுக்கு துணை போகாதீர்கள்! கம்யூனிஸ்ட்களே!

மலப்புரம் மாவட்ட இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு கொடுப்பதற்காக ‘குரான்’ அடங்கிய பொருட்களை ஐக்கிய அரபு அமீரக தூதரகம் கேட்டு கொண்டதன் பேரில் 28 பொட்டலங்களை கல்வி அமைச்சகம் மூலம் அனுப்பியதாக கேரள மாநில உயர் கல்வி அமைச்சர் ஜலீல் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு வருடமும் ரமலான் போது ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து உலகின் பல இடங்களில் உள்ள மசூதிகளை ரமலான் பரிசு பொருட்கள் மற்றும் குரானை அனுப்புவது வழக்கம். அது போலவே கேரளாவில் உள்ள மசூதிகளுக்கு அனுப்பியது என்றும், ஊரடங்கு உத்தரவினால் அவைகளை உரிய மசூதிகளுக்கு கொண்டு சேர்க்க அவர்களால் முடியவில்லை என்றும், அதனால் தன் அமைச்சக வாகனங்களில் கொண்டு செல்ல உத்தரவிட்டதாகவும் அமைச்சர் ஜலீல் கூறுகிறார்.

மத சார்பற்ற அரசின் பிரதமர் ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் எப்படி பங்கேற்கலாம் என கேள்வி எழுப்பிய கம்யூனிஸ்டுகள், குரானை அரசு வாகனங்களில் ஏற்றி விநியோகம் செய்வதில் தவறில்லை என சொல்லும் கேரள அமைச்சரை கண்டிப்பார்களா?

இதற்கிடையில் தாங்கள் குரான் புத்தகங்களை கேரளாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பவில்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படியானால் கேரள அரசின் அமைச்சர் மலப்புரம் மாவட்டத்திற்கு அரசு வாகனத்தில் அனுப்பியது என்ன?

தங்க கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷுடன் அமைச்சர் ஜலீல் பல முறை அலைபேசியில் பேசியதற்கான உறுதி செய்துள்ளது புலனாய்வு நிறுவனம். அவர்கள் இருவருக்கும் உள்ள தொடர்பு என்ன? ஒரு அமைச்சர் தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ள குற்றவாளியோடு பேசியதன் மர்மம் என்ன?

குரானை கொண்டு சென்றதாக சொல்லி தங்கம் கடத்துவதில் உடந்தையாக இருந்தாரா அமைச்சர்? தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் அலுவலகத்தின் தொடர்பு குறித்த அதிர்ச்சி நிலவும் நேரத்தில், அந்த மாநிலத்தின் அமைச்சர் மதத்தின் பெயரால் இந்த தங்க கடத்தலுக்கு துணை சென்றதாக விமர்சிக்கப்படுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு : அமைச்சர் ஜலீல் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான சிமி(SIMI) யின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நாராயணன் திருப்பதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories