குரானை கொண்டு சென்றதாகக் கூறி… தங்கக் கடத்தலில் அமைச்சர் உடந்தையா?

kerala-minister-k-t-jaleel
kerala-minister-k-t-jaleel

தேச துரோக செயலுக்கு துணை போகாதீர்கள்! கம்யூனிஸ்ட்களே!

மலப்புரம் மாவட்ட இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு கொடுப்பதற்காக ‘குரான்’ அடங்கிய பொருட்களை ஐக்கிய அரபு அமீரக தூதரகம் கேட்டு கொண்டதன் பேரில் 28 பொட்டலங்களை கல்வி அமைச்சகம் மூலம் அனுப்பியதாக கேரள மாநில உயர் கல்வி அமைச்சர் ஜலீல் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு வருடமும் ரமலான் போது ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து உலகின் பல இடங்களில் உள்ள மசூதிகளை ரமலான் பரிசு பொருட்கள் மற்றும் குரானை அனுப்புவது வழக்கம். அது போலவே கேரளாவில் உள்ள மசூதிகளுக்கு அனுப்பியது என்றும், ஊரடங்கு உத்தரவினால் அவைகளை உரிய மசூதிகளுக்கு கொண்டு சேர்க்க அவர்களால் முடியவில்லை என்றும், அதனால் தன் அமைச்சக வாகனங்களில் கொண்டு செல்ல உத்தரவிட்டதாகவும் அமைச்சர் ஜலீல் கூறுகிறார்.

மத சார்பற்ற அரசின் பிரதமர் ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் எப்படி பங்கேற்கலாம் என கேள்வி எழுப்பிய கம்யூனிஸ்டுகள், குரானை அரசு வாகனங்களில் ஏற்றி விநியோகம் செய்வதில் தவறில்லை என சொல்லும் கேரள அமைச்சரை கண்டிப்பார்களா?

இதற்கிடையில் தாங்கள் குரான் புத்தகங்களை கேரளாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பவில்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படியானால் கேரள அரசின் அமைச்சர் மலப்புரம் மாவட்டத்திற்கு அரசு வாகனத்தில் அனுப்பியது என்ன?

தங்க கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷுடன் அமைச்சர் ஜலீல் பல முறை அலைபேசியில் பேசியதற்கான உறுதி செய்துள்ளது புலனாய்வு நிறுவனம். அவர்கள் இருவருக்கும் உள்ள தொடர்பு என்ன? ஒரு அமைச்சர் தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ள குற்றவாளியோடு பேசியதன் மர்மம் என்ன?

குரானை கொண்டு சென்றதாக சொல்லி தங்கம் கடத்துவதில் உடந்தையாக இருந்தாரா அமைச்சர்? தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் அலுவலகத்தின் தொடர்பு குறித்த அதிர்ச்சி நிலவும் நேரத்தில், அந்த மாநிலத்தின் அமைச்சர் மதத்தின் பெயரால் இந்த தங்க கடத்தலுக்கு துணை சென்றதாக விமர்சிக்கப்படுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு : அமைச்சர் ஜலீல் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான சிமி(SIMI) யின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நாராயணன் திருப்பதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories