இயற்கையை உயிரூட்டும் தென்மேற்கு பருவமழை!

nagpur-flower-show1
தொங்கு சட்டிகளில் செடிகள் ( கூரை தோட்டத்தில்)

இயற்கையினையே உயிரூட்டும் தென்மேற்கு பருவமழை

^ ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்

மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியின் 11 மாவட்டங்களில் அனைத்து பருவ நிலைகளுமே மிகவும் கடுமையாய் இருக்கும் என்பது பொதுவான கருத்து.

ஒவ்வொரு பருவ நிலையும் தத்தம் தனித்துவத்துடன் இருக்கும். சில நகரங்களில் 48 டிகிரி செல்சியஸை தொடும் கோடை வெயில், சில நகரங்களில் 4 டிகிரி செல்சியஸ் வந்துவிடும் குளிர் காலம், என ஒரு வித்தியாசமான விதர்பா பகுதி.

தற்போது தென்மேற்கு பருவக்காற்று விதர்பா பக்கம் வீசும் சாரலினால் சில நாட்களாக ரம்மியமாய் உள்ளது.

ஆறுகளில், ஏரி குளங்களில் எல்லாம் கணிசமாக நீர்மட்டம் உயர்ந்து, மழை நீரைப் பெற்ற பல மரங்கள் புத்துணர்ச்சியுடன் பச்சைக் கம்பளத்தை தன் மேல் விரித்து பரவசப்படுத்தும் காட்சி, பூங்காக்களில் விதவிதமாய் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் சிறிய செடிகள், வீட்டுத் தோட்டங்களில் மனதை மயக்கும் பூக்கள்- என கண்களைப் பறிக்கும் காட்சியாய் இருக்கின்றன.

nagpur-pipe-garden
பைப்புகளில் வளர்க்கப் படும் அழகுப் பூக்கள் ( கூரைத் தோட்டம்).

வர்தாவில் 30 வருட காலமாக வசிக்கும் திரு. பாலகிருஷ்ணன் வீட்டு கூரைத் தோட்டம் ( Roof Garden) இன்றைய தினத்தில் பார்ப்பவர் மனதை கவரும் விதத்தில் உள்ளது.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

ரயில்வேயில் இருந்து ஓய்வுபெற்றவர் பாலகிருஷ்ணன்!அவர் மனைவி மல்லிகா மற்றும் இரண்டாவது மகள் ஐஸ்வர்யாவின் உழைப்பாலும் ஈடுபாட்டாலும், செடிகளின் மேல் உள்ள பற்றாலும், தம் வீட்டு கூரைத் தோட்டத்துக் உயிர் கொடுத்துள்ளனர்.

nagpur-flower-show2
ஒரு வகையான லில்லி இலைகள் (நாக்பூர்).

ஆறு மாத காலமாக கோடையிலும் தகுந்த முன்னேற்பாடுகளை செய்தும், சரியான பராமரிப்பாலும் பூ மற்றும் காய்கறிச் செடிகளை பாதுகாத்து வந்தவர்களுக்கு சமீபத்திய தென்மேற்கு பருவமழை வரப் பிரசாதமாக உள்ளதாக கூறுகின்றனர்.

பாலகிருஷ்ணன் கூறுகையில், “நான் பணியில் இருந்த போது பல ரயில் நிலையங்களுக்கு அருகில் வாடும் செடிகளை, குறிப்பாக மருத்துவ குணமுடைய மூலிகளை பார்க்கும் போதெல்லாம் வள்ளலாரின் வாக்கான “வாடும் பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” – என்ற எண்ணமே மனதில் எழும். அதனால், ஓய்வு பெற்ற பிறகு, என் இல்லத்தில் தோட்டமும், கூரைத் தோட்டமும் வடிவமைத்தேன்.

nagpur-flower-show
பூச்செடிகள் ( கூரைத் தோட்டத்தில்)

மழைக் காலத்தில் மணம் வீசும் என் இல்லத் தோட்டத்தில் (சுமார் 800 சதுர அடியில்) 125 பானைகளில் செடிகள் வைத்துள்ளோம்.
செம்பருத்தி – 12 வகைகள்,
ரோஜா- 20 வகைகள்,
டேபிள் ரோஜா- 15 வகைகள்,
செவந்தி- 10 வகைகள்,
சாமந்தி-10 வகைகள்,
அலங்கார செடிகள்-4 வகைகள்,
கோழிக்கொண்டை,
முல்லை, வெற்றிலைச் செடி- 2, தொட்டி சம்பகம்-1, அரளிப்பூ-2, கிருஷ்ண கமலம்- 2 வகைகள்- ஆக மொத்தம் 125 பானைகளில் வைத்து பராமரிக்கிறோம்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

இதைத் தவிர தக்காளி, முட்டை கோஸ், காலி ஃப்ளவர், வெண்டைக்காய் மற்றும் கத்தரிக்காய் செடிகளும் வைத்துள்ளோம் …

இவற்றைத் தவிர தோட்டத்தில் 20 சட்டிகளில் பலவிதமான செடிகளை வைத்துள்ளோம்’ என்றார்.

nagpur-krishnakamalam1
கிருஷ்ண கமலம் ( வர்தா)

தன் இல்லத்தில் இருக்கும் மூலிகை செடிகளைப் பற்றி கூறும் போது, ‘ துளசி, மஞ்சள், சென்னையில் இருந்து எடுத்து வந்த ஓமவல்லி, மராட்டிய மக்கள் சிறுநீர் கல் குணமாக்கப் பயன்படுத்தும் ‘பத்ரி’ (Patri) செடி, கருவேப்பிலை செடிகளும், வேம்பு மற்றும் எலுமிச்சை மரங்களும் உள்ளன” என்றார்.

பட்ட மேற்படிப்பு படித்த அவர்களின் இரண்டாவது பெண் ஐஸ்வர்யா, “கற்றாழையை முகப் பொலிவுக்கும், புதினாவை அக அழகிற்காகவும் என் தோழிகள் என் தோட்டத்திலிருந்து எடுத்து செல்வர்” என்றும், தன் வீட்டு மூலிகைகளை வைத்து சோப்புகள் தயாரிப்பதையும் பெருமிதத்துடன் கூறினார்.

nagpur-flower-show3
பூங்கொத்து போன்ற விருக்‌ஷி மரம் (நாக்பூர்).

நாக்பூரில் ஸ்ரீநிவாஸன் என்பவரின் இல்லத் தோட்டத்தில் இருக்கும் விருட்சி மரமானது இயற்கை பரிசளித்த பூங்கொத்து போல் வருவோரை கவர்கிறது. லில்லி வகையில் ஒன்றும் கண்ணுக்கு விருந்தாகிறது.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தங்கள் பகுதிகளிலும் பருவ மழையின் ஒவ்வொரு துளியையும் அருமையை அறிந்து, மழை நீரைப் பயன்படுத்தி செடிகளை வளர்த்து இயற்கை அன்னையின் பசுமை கம்பளமாக மாற்ற நாமும் முயற்சி செய்யலாம். சுற்றுப்புறத்தையும் தூய்மையாக, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பூக்களின் மலர்ச்சியுடன் பராமரிக்கலாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories